அஜித்தின் குட்பேட் அக்லி தை பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி.. ஆதிக்ரவிச்சந்திரன் பிறந்தநாளில் அப்டேட்
ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் ரிலீஸ் ஆவது உறுதி என்று அந்த படத்தை தயாரிக்கும் மைத்ரி நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் ஆதிக் பிறந்தநாளையொட்டி பட தயாரிப்பு நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.
துணிவு திரைப்படத்திற்கு பின் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அஜித்தின் அடுத்த படம் இன்னமும் வெளியாகவில்லை. துணிவு படத்திற்கு பின் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக சொல்லப்பட்டது.ஆனால் மகிழ் திருமேனி படத்தை இயக்குவதாக முடிவாகி அஜர்பைசான் நாட்டை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை துவங்கினார்கள்.படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்தனர்.
மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடிக்க படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதற்கிடையே விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீஸ் என அறிவித்தார்கள். தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் ஒரு பாடல் எடுக்க வேண்டியிருக்கிறது எனவே இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜீத்.மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்துள்ளது. வரும் 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.270 கோடி எனத்தெரிகிறது. அதில் அஜித்தின் சம்பளம் மட்டும் ரூ. 165 கோடி ரூபாயாம். இப்படத்தில் அஜித் மூன்று கட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. இந்ந்நிலையில், இப்படத்தில் அஜித்துடன் நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார்.தபுவும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்குப் பின், அஜித்துடன் ஜோடியாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா முக்கியக் கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். தெலுங்கின் முன்னணி நடிகரான சுனிலும் இப்படத்தில் நடிக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தில் அஜீத் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பதால் இந்த படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். அஜீத் கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'வரலாறு' படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் அபாரமான தத்ரூபமான நடிப்பு பாராட்டுகளை பெற்றது. அந்த படத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் அஜித். தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மீண்டும் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால், குட்பேட் அக்லி ரிலீஸ் தள்ளிப்போகும் என்று செய்திகள் வெளியான நிலையில் பொங்கல் பண்டிகைக்கு குட் பேட் அக்லி ரிலீஸ் ஆவது உறுதி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் பட ரிலீஸ் பற்றி தற்போது அப்டேட் கொடுத்துள்ளனர்.
What's Your Reaction?