Guru Peyarchi Palan : குரு பெயர்ச்சி பலன் 2024:கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள்.. 2025ல் திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?
Guru Peyarchi Palangal 2024 in Tamil : குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு வேலையும் புரமோசனும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Guru Peyarchi Palangal 2024 in Tamil : குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகம். ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் தற்போது செவ்வாயின் நட்சத்திரமான மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார் குரு பகவான். குருபகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகர ராசிகளின் மீது விழுகிறது. அக்டோபர் 9ஆம் தேதி முதல் வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பயணமும் பார்வையும் எந்த ராசிக்காரர்களுக்கு கோடிஸ்வர யோகத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
மேஷம்:
குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீடான ரிஷபம் ராசியில் பயணம் செய்கிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். பெரியோர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். 2025ஆம் ஆண்டு அஷ்டலட்சுமி யோகத்தை கொடுக்கப்போகிறார் குரு பகவான்.
கடகம்:
லாப வீட்டில் பயணம் செய்யும் குருபகவான் எதிர்பாராத லாபத்தை கொட்டிக்கொடுக்கப்போகிறார். கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். தொட்டது துலங்கப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பரும் கிடைக்கக்போகிறது. 2025ஆம் ஆண்டிற்குள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப் போகிறது.
சிம்மம்:
பத்தாம் இடத்தில் பயணம் செய்யும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். குரு பெயர்ச்சி காலத்தில் திருக்கடையூர், திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.
கன்னி:
ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் கோடி நன்மைகளை தருவார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் சகலவிதமான நன்மைகளும் உண்டாகும். வேலை கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் தொழில் வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும்.
விருச்சிகம்:
குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். 7ஆம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவானின் நேரடியான பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும் தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம்.
மகரம்:
குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். முன்னேற்றங்கள் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கர்ப்பிணி பெண்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்கவும்.
What's Your Reaction?