Samuthrika Latchanam : கணவனின் தலைவிதியை நிர்ணயிக்கும் மனைவியின் பாதங்கள்.. சாமுத்ரிகா லட்சணம் சொல்லும் ரகசியம்..

Samuthrika Latchanam Predicts Husband and Wife Unity : பெண்கள் நடக்கும் போது அவளது நான்காம் விரலும், சுண்டு விரலும் பூமியில் படாமல் நடந்தால் அவள் கணவன் மீது நம்பிக்கை அற்றவளாக இருப்பாள். இதனால் வாழ்வில் சண்டை சச்சரவு ஏற்படும்.

Aug 6, 2024 - 07:09
Aug 6, 2024 - 12:00
 0
Samuthrika Latchanam : கணவனின் தலைவிதியை நிர்ணயிக்கும் மனைவியின் பாதங்கள்.. சாமுத்ரிகா லட்சணம்  சொல்லும் ரகசியம்..
Samuthrika Latchanam Predicts Husband and Wife Unity

Samuthrika Latchanam Predicts Husband and Wife Unity : எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. பெண்களுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று  சாமுத்திரிகா லட்சணத்தில் கூறப்பட்டுள்ளது. மனைவி பாதத்தை வைத்தே கணவனின் தலைவிதியை கணித்து விடலாம் என்று நிறைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று சாமுத்ரிகா சாஸ்திரம்( Samuthrika Latchanam). இந்த சாஸ்திரம் தான் ஆண், பெண் உறவுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வுகள். 

பெண்ணில் விரல்கள்:

பெண்ணின் இரண்டாம் விரல் கட்டை விரலை விட பெரியதாக இருந்தால் அந்த பெண் யாருக்கும் அடங்கமாட்டாள். முக்கியமாக கணவனுக்கு அடங்கவே மாட்டாள். கணவன் சொல்வது எதையும் கேக்காமல் தனக்கு தானே முடிவு எடுத்துக்கொள்வாள் என்று சாமுத்திரிகா லட்சணம் சொல்கிறது.

மனைவியின் பாதம்:

மனைவியின் பாதம் எப்படி இருக்கிறதோ, அதை பொறுத்தே கணவனின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம்.  ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய  வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல்  அமைந்திருக்க வேண்டும் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. 

அதிர்ஷ்டசாலி கணவன்:
 
பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.  கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது  நலம் ஆரோக்கியமாகவும்,  அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள். பெண்களின் பாதம் வட்ட வடிவில் இருந்தால் கணவன் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
 
கணவனின் தலை விதி:

பெண்கள் கால்களின் விரல்கள் 5 நபர்களாக குறிப்பிடப்படுகிறது. கட்டை விரல்-அங்குஷ்ட்டா,இரண்டாம் விரல் -பர்ஜானி,நடு விரல்-மத்தியமா,நான்காம் விரல்-அனாமிகா,சுண்டு விரல்-கனிஷ்ட்டிகா ஒரு பெண் தனது பாதத்தில் சக்ரா , வாஜா, ஸ்வஸ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவரின் தலைவிதியை அறிய முடியும்.

அடங்காத மனைவி: 

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று  அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். பெண்ணின் இரண்டாம் விரல் கட்டை விரலை விட பெரியதாக இருந்தால் அந்த பெண் யாருக்கும் அடங்கமாட்டாள். முக்கியமாக கணவனுக்கு அடங்கவே மாட்டாள். கணவன் சொல்வது எதையும் கேக்காமல் தனக்கு தானே முடிவு எடுத்துக்கொள்வாள். அதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.

சண்டை சச்சரவு: 

கால்களின் விரல்கள் மலை போன்று பெரியதாக இருந்தால் அணைத்து பிரச்சனைகளையும் தாங்கி கணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பாள். மேலும் நல்ல குணம் படைத்தவளாக இருப்பாள். பெண்கள் நடக்கும் போது அவளது நான்காம் விரலும், சுண்டு விரலும் பூமியில் படாமல் நடந்தால் அவள் கணவன் மீது நம்பிக்கை அற்றவளாக இருப்பாள். இதனால் வாழ்வில் சண்டை சச்சரவு ஏற்படும். நான்காம் விரலும் சுண்டு விரலும் ஒரே அளவில் இருந்தால் கணவனுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும்.

ஊதாரியான மனைவி:

அனைத்து விரல்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால் இவர்கள் பண விஷயத்தில் ஊதாரியாக இருப்பார்கள். செலவு அதிகம் செய்வார்கள். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண்  குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow