ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி நாகேந்திரன் சிறையில் ரகளை.. கெயெழுத்து போட மறுத்து வாக்குவாதம்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aug 9, 2024 - 21:13
Aug 9, 2024 - 21:30
 0
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி நாகேந்திரன் சிறையில் ரகளை..  கெயெழுத்து போட மறுத்து வாக்குவாதம்..
கைதான ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமன்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார், இதுவரை 23 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 23 நபர்களில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனும் ஒருவர். இந்த கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது அஸ்வத்தாமனுடனான தொடர்பு போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

இவர் வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வத்தாமனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு ஊராட்சியில், பிரபல தனியார் சோப்பு கம்பெனிக்கு சொந்தமான இடம் விற்பனைக்கு வந்துள்ளது.

சுமார் 155 ஏக்கர் மதிப்புள்ள அந்த இடத்தை மனீஷ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவரும் வாங்க முடிவு செய்தனர். அப்போது அஸ்வத்தாமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டு 155 ஏக்கர் நிலத்தில் சுமார் 10 ஏக்கர் தங்களுக்கு தர வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு ஏக்கர் சுமார் ரூ. 2 கோடி எனவும் சுமார் ரூ. 20 கோடி மதிப்புடைய இடத்தை தர வேண்டும் என்று அஸ்வத்தாமன் தரப்பில் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மனீஷும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி இந்த பஞ்சாயத்து தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கிடம் சென்றதாகவும், உடனே ஆம்ஸ்ட்ராங்கும் அஸ்வத்தாமனிடம் பேசியதாக தெரிகிறது. ஆனால் அப்போது ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே ஏற்கனவே இருந்த மோதலில், அஸ்வத்தாமனின் அப்பா வடசென்னை ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு நேரில் அழைத்து பேசியதாகவும், ஆனால் அப்போது ஆம்ஸ்ட்ராங் எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்பு நாகேந்திரன் கொலை வழக்கில் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய சிறையிலேயே திட்டமிட்டாரா? என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்த நிலையில், தனிப்படை போலீசார் கடந்த ஒரு வருடங்களாக நாகேந்திரனை சிறையில் வந்து சந்தித்தவர்கள் யார், யார் என்ற விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படியில் நாகேந்திரன் தொடர்பான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களையும் சேகரித்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் பெயரும் குற்றத்தில் 24வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில், ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்கான கைது ஆணையை சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்கினர்.

அதன் பின்னர், கைது ஆணையை நாகேந்திரனிடம் கொடுத்தபோது, நாகேந்திரன் ரகளை செய்து வாக்குவாத்தில் ஈடுபட்தாகவும், அப்போது கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. என்னை எதற்காக வழக்கில் சேர்த்து இருக்கிறீர்கள்? என் மகனை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள்? என்று நாகேந்திரன் சென்னை செம்பியம் போலீசாரிடம் ரகளை ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்பு கைது குறிப்பு ஆணையில் நாகேந்திரன் கையெழுத்து போடத நிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த செம்பியம்  காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி சிறை அலுவலரிடம் கைதுக்கான குறிப்பு ஆணையை வழங்கி அவரிடம் கையெழுத்து பெற்று நாகேந்திரனை கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow