Pa Ranjith Mother : "இந்த படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டார்; பெருமையா இருக்கு" - ரஞ்சித்தின் தாய் உருக்கம்

Pa Ranjith Mother on Thangalaan Movie : தங்கலான் திரைப்படத்தை உருவாக்குவதற்கு, தனது மகன் ரஞ்சித் மிகவும் கஷ்டபட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் தாய் குணவதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Aug 15, 2024 - 20:47
Aug 16, 2024 - 16:41
 0
Pa Ranjith Mother : "இந்த படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டார்; பெருமையா இருக்கு" - ரஞ்சித்தின் தாய் உருக்கம்
Pa Ranjith Mother on Thangalaan Movie

Pa Ranjith Mother on Thangalaan Movie : இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் இன்று [ஆகஸ்ட் 15ஆம் தேதி] உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

தங்கலான் திரைப்படம் (Thangalaan Movie) சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் இருப்பது எப்படி கண்டறியப்பட்டது, சுரங்கத்தொழிலுக்காக மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்த படமாக இது உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது.

தங்கலான் திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது. மேக்கிங் மற்றும் திரைக்கதை, இசை என அனைத்து சிறப்பாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் இயக்குனர் ரஞ்சித்தின் தாய் மற்றும் குடும்பத்தினர் தங்கலான் படத்தினை கண்டு ரசித்தனர். மேலும், இந்த படத்தில் நடிகர் விக்ரம் - பார்வதி மகளாக வேங்கையம்மா கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் யாழினி திரையில் கண்டு களித்தார்.

இதனையடுத்து படம் முடிந்து பின், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் தாய் குணவதி, தனது மகன் இந்த திரைப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்ததாகவும், அதிக கஷ்டம் அடைந்ததாகவும், இப்பொழுது திரையில் பார்பதற்கு பெருமையாக இருப்பதாகவும் உருக்கமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய குழந்தை நட்சத்திரம் யாழினி, இந்த திரைப்படத்தில் இயக்குனர் ரஞ்சித் சொல்லி கொடுத்ததை இரண்டு மூன்று டேக்கில் நடிததாகவும், அது அங்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால் திரையில் பார்பதற்கு பிரம்மாண்டமாக இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது மகழ்ச்சியாக இருப்பதாகவும் யாழினி கூறினார்.

குழந்தை நட்சத்திரம் யாழினி மற்றும் பா.ரஞ்சித் குடும்பத்தினருடன், திரைபடத்தை காண வந்திருந்தவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திரைப்படத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து அரங்கம் நிறைந்து காணப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow