Formula 4 Car Race : பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு.. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பதட்டம்..

Electricity Leakage at Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வின்போது, அமைச்சர்கள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

Sep 1, 2024 - 06:45
Sep 1, 2024 - 11:53
 0
Formula 4 Car Race : பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு.. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பதட்டம்..
பார்வையாளர் மாடத்தில் மின் கசிவால் பதட்டம்

Electricity Leakage at Formula 4 Car Race in Chennai : உலகின் பல்வேறு நாடுகளில் ஃபார்முலா கார் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கார் பந்தயங்களுக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக சென்னையில் ஃபர்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நேற்றும், இன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டி கார் பந்தய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் போட்டி தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் JK FLGB F4, F4 Indian Championship, Indian Racing League ஆகிய பந்தயங்களுக்கான பயிற்சி சுற்றும், அதன்பிறகு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அதே வேளையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. 'தமிழ்நாட்டில் சில இடங்களில் தரமான சாலைகள் அமைக்கப்படவில்லை; பள்ளிகள் சீரமைக்கப்படவில்லை. இந்த நேரத்தில் கார் பந்தயம் அவசியமா?'' என்று அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

மேலும் ஃபார்முலா கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால்  கார் பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ''எஃப்.ஐ.ஏ சான்றிதழ் இல்லாமல் கார் பந்தயம் நடத்தக்கூடாது; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கார் பந்தயம் நடத்த வேண்டும்'' என்று உத்தரவிட்டது.

நேற்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீண்ட நேர தாமத்திற்கு பிறகு, இரவு 07.10 மணியளவில் சென்னையில் கார் பந்தயம் மாலை தொடங்கியது. அதிகாரப்பூர்வமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இதனையடுத்து, சென்னை பல்லவன் சாலை பகுதியில் எஃப் ஒன் கார் பந்தயத்தை சாலை ஓரங்களில் சென்ற பொதுமக்கள் பார்க்க முயன்றபோது காவல்துறையினர், அவர்களை அப்புறம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கும் பொதுமக்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வை அமைச்சர்கள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர்கள் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டு இரண்டு நிமிடம் மின் தடை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் மின்கசிவு சரி செய்யப்பட்டு உடனடியாக மின் தடை சரிசெய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow