ரத்தம் குடித்த அட்டை ஓபிஎஸ்.. வேதாளம் அண்ணாமலை.. அடித்து ஆடும் ஜெயக்குமார்

அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Jul 11, 2024 - 10:41
Jul 11, 2024 - 15:54
 0
ரத்தம் குடித்த அட்டை ஓபிஎஸ்.. வேதாளம் அண்ணாமலை.. அடித்து ஆடும் ஜெயக்குமார்
jayakumar press meet

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  மக்களவை தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். நேற்றைய தினம் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் ஆலோசித்தார். அப்போது 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலா,ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். அதற்கான காரணத்தை கூறிய ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரனால் அடையாளம் காணப்பட்டவர்.ஓ.பன்னீர்செல்வதற்கு கட்சியின் மீது விசுவாசம் கிடையாது. கட்சியிலேயே இல்லாத சசிகலா எவ்வாறு அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைப்பார்?..

அதிமுக தொண்டர்களை 90% இணைத்ததாக சசிகலா கூறுவது முழு சுவற்றில் பூசணிக்காயை மறைப்பது போன்றது. அதிமுக எழுச்சியோடு பயணித்து வருகிறது. தொடர்ந்து அதிமுக பற்றிய மாய கருத்தை சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

கட்சிக்கு விரோதமான துரோக செயலை செய்தவர் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்களின் இரத்தத்தை குடித்த அட்டை ஒ.பன்னீர் செல்வம். இபிஎஸ் அவர்கள் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். கட்சியால் வளர்ந்தவர்கள் கட்சியை உடைக்கலாமா என்று கேட்ட ஜெயக்குமார், ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் மீது விசுவாசம் இல்லை என்றார். 

அதிமுகவை 90% இணைப்பு விட்டதாக சசிகலா கூறுவது முழு சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போன்று  என்று கூறிய ஜெயக்குமார், அண்ணாமலை என்கின்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு தற்போது காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மீது ஏறி இருக்கின்றது என்று கிண்டலடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow