F4 Car Race in Chennai : தாமதமாக தொடங்கும் கார் பந்தயம்.. பாதுகாப்பு பணியில் ஈடுகட்ட காவல் உதவி ஆணையர் மாரடைப்பில் மரணம்

F4 Car Race in Chennai : இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளிப்பார்கள் என்றும் இன்று இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Aug 31, 2024 - 17:42
Sep 1, 2024 - 10:08
 0
F4 Car Race in Chennai : தாமதமாக தொடங்கும் கார் பந்தயம்.. பாதுகாப்பு பணியில் ஈடுகட்ட காவல் உதவி ஆணையர் மாரடைப்பில் மரணம்
Chennai Car Race

F4 Car Race in Chennai : உலகின் பல்வேறு நாடுகளில் ஃபார்முலா கார் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கார் பந்தயங்களுக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக சென்னையில் ஃபர்முலா 4 கார் ரேஸ் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டி கார் பந்தய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் போட்டி தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெற உள்ளன. இதில் JK FLGB F4, F4 Indian Championship, Indian Racing League ஆகிய பந்தயங்களுக்கான பயிற்சி சுற்றும், அதன்பிறகு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 

அதே வேளையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. 'தமிழ்நாட்டில் சில இடங்களில் தரமான சாலைகள் அமைக்கப்படவில்லை; பள்ளிகள் சீரமைக்கப்படவில்லை. இந்த நேரத்தில் கார் பந்தயம் அவசியமா?'' என்று அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும் ஃபார்முலா கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால்  கார் பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ''எஃப்.ஐ.ஏ சான்றிதழ் இல்லாமல் கார் பந்தயம் நடத்தக்கூடாது; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கார் பந்தயம் நடத்த வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

முதலில், இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளிப்பார்கள் என்றும் இன்று இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயம் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சிவக்குமார் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சக போலீஸ் அதிகாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow