குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024 : 6 ராசிக்காரர்களை புரட்டிப்போடும் குரு.. தீபாவளியில் அதிரடி சரவெடி

Guru Peyarchi Palan 2024 : குரு பகவான் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி வக்ரமடையப்போகிறார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் யாருடைய வாழ்க்கையை புரட்டிப்போடப்போகிறார் என்று பார்க்கலாம்.

Jul 27, 2024 - 15:35
Jul 27, 2024 - 17:20
 0
குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024 :  6 ராசிக்காரர்களை புரட்டிப்போடும் குரு.. தீபாவளியில் அதிரடி சரவெடி
Guru Vakra Peyarchi Palan 2024

Guru Peyarchi Palan 2024 : குரு பகவான் சில கிரகங்கங்களுடன் சேரும் போது புதுவிதமான யோகத்தை தருவார். சந்திரன், செவ்வாய், சுக்கிரன் உடன் குரு கூட்டணி அமைத்தாலோ பார்த்தாலோ கோடீஸ்வர யோகம் தேடி வரும்.  'குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப தீபாவளிக்கு முன்பாகவே சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கோடி நன்மைகள் நாடி வரப்போகிறது. 

குரு சந்திர யோகம்: 

குருவும் ,சந்திரனும் இணைந்து(Guru Chandra Yogam) ஒரு ராசியில் இருந்தாலோ அல்லது பார்த்துக்கொண்டாலோ குருசந்திர யோகம் ஆகும். தற்போது மேஷ ராசியில் உள்ள குரு பகவான் துலாம் ராசியில் உள்ள சந்திரனை பார்வையிடுகிறார். குரு சந்திர யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கும், துலாம் ராசிக்காரர்களுக்கும் கிடைப்பதால் இந்த நாளில் பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். 

குரு மங்கள யோகம்: 

குருவும் செவ்வாயும்(Guru Mangala Yogam) ஒன்றுகூடி 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது குருமங்கள யோகம் உண்டாகும். குரு பகவானும் செவ்வாய் பகவானும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டாலும் குரு மங்கள யோகம் கிடைக்கும். இதன் மூலம் சிந்தனைத் திறன் அதிகரிக்கவும், சாதனைகள் பல புரியவும் இந்த யோகம் உதவும். குருவும் செவ்வாயும் ராஜ கிரகங்கள். ஆகவே, அமைச்சருக்கு இணையான பதவியும் பொறுப்பும் கிடைக்கும். இப்போது ரிஷப ராசியில் குருவும் செவ்வாயும் கூடியுள்ளனர். ஆடி கிருத்திகை நாளில் சந்திரனும் குருவுடன் இணைய உள்ளதால் குரு சந்திர யோகமும் தேடி வரப்போகிறது. 

மேஷம்: 

குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம்(Mesha Rasi Guru Peyarchi Palan) செய்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாயும் குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார். குடும்ப ஸ்தான குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் நோய் பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது. செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு தற்போது பார்க்கும் வேலையை விட நல்ல வேலைகள் கிடைக்கும். தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பது போல கவலைகள் வெடித்து சிதறப்போகிறது.  அதிரடி சரவெடிதான். 

ரிஷபம்:  

உங்கள் ராசியில் ஜென்ம குருவாக பயணம்(Rishaba Rasi Guru Peyarchi Palan) செய்கிறார் குரு பகவான். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. குரு பகவானுடன் தற்போது செவ்வாயும் இணைந்துள்ளதால் குரு மங்கள யோகமும் கைகூடி வந்துள்ளது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவருமானம் அதிகரிக்கும்.  குரு மங்கள யோகமும், குரு சந்திர யோகமும் கைகூடி வந்துள்ளது. பேச்சில் தெளிவும், மனதில் அமைதியும் பிறக்கும். கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய நேரம் கைகூடி வந்துள்ளது. பார்க்கும் வேலையில் உயர் பொறுப்புகளும் உங்களுக்கு நாடி வரப்போகிறது. 

மிதுனம்: 

குரு பகவான் 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில்((Mithuna Rasi Guru Peyarchi Palan)) சஞ்சரிப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் வீடு, 6 ஆம் வீடு மற்றும் 8 ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். உங்களுக்கு பண வரவுக்கு பஞ்சமிருக்காது.  அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். குருவின் வக்ர பெயர்ச்சியால் தீபாவளிக்கு முன்பே கோடிகளில் புரளப்போகிறீர்கள். 

கடகம்: 

லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கு 3ம் வீட்டினை குரு 5ம் பார்வையாக(Kadagam Rasi Guru Peyarchi Palan) பார்க்கிறார். 5ஆம் வீட்டையும் 7ஆம் வீட்டையும் குருபகவான் பார்வையிடுகிறார்.  குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். குரு மங்கள யோகமும், குரு சந்திர யோகமும் கைகூடி வந்துள்ளதால் கோடி கோடியாக செல்வம் பெருகப்போகிறது. 

சிம்மம்: 

பத்தாம் வீட்டில் குரு உடன் செவ்வாய், சந்திரன் கூடி இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு  நன்மையே நடக்கும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வீடு,மனை வாங்கலாம்.  நோய் நொடிகள் தீரும், கடன் பிரச்சினைகள் தீரும். வேலையில் புரமோசன் தேடி வரப்போகிறது. 

கன்னி: 

ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 3ஆமிடம், 5ஆம் இடத்தை குரு பார்வையிடுகிறார். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow