விஜய்க்கு இடம் கொடுத்தால் மடத்தை பிடித்து விடுவார் என திமுக பயப்படுறது.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி
புதிய கட்சி ஆரம்பிக்கும் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் கொடுக்காத திமுக அரசு கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கும் அனுமதி மறுப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யை பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகிறது என்று முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மாநாடு நடத்த விஜய்க்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்து விடுவார் என்று அச்சப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் இன்றைய தினம் மரியாதை நிமித்தமாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்துவதாக குற்றம் சாட்டினார். சைக்கிள் ஓட்டுவதும் போட்டோ எடுப்பது தான் அமெரிக்காவில் முதல்வர் செய்து கொண்டிருக்கின்றார். அமெரிக்கா செல்வதற்கு முன்பு இங்கு தொடங்கப்பட்ட தொழில்கள் என்ன?
பிரதமர் வெளிநாடு செல்வதை விமர்சித்தவர்கள் இன்று வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றனர். பி எம் ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தை முன்பு ஏற்பதாக சொன்ன தமிழக அரசு இப்போது ஏற்க மாட்டோம் என்கிறது.
விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துகிறது. விஜய் அரசியலுக்கு வருவதைப் பார்த்து திமுக பயப்படுகிறது.விஜய்க்கு இடம் கொடுத்தால் மடத்தை பிடித்து விடுவார் என்கின்ற பயம் திமுகவிற்கு உள்ளது.விஜய்க்கு கொஸ்டின் பேப்பர் கொடுத்து பதிலை பெற்று வருகிறது காவல்துறை.
கட்சிக்கு மாநாடு நடத்த இடம் கொடுக்க மறுப்பதை போல தற்போது கோட் திரைப்பட காட்சிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன
விருதுநகரில் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது இதை பார்க்கும் போது காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.எதிர்க்கட்சியாக இருக்கும் போது மேகதாது அணை கட்டினால் பிரச்சனை என்று திமுக பேசியது.இப்போது தன்னுரிமையை தன்மானத்தை மற்ற மாநிலங்களிடம் இழக்கிறது தமிழகம்
தமிழ்நாட்டில் திரைத் துறையிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தால் ஹேமா கமிட்டி போன்ற ஒன்று அவசியம் தேவைப்படுகிறது.அரசியலில் உள்ள பெண்களுக்கும் பாதுகாப்பின்மை இருக்கின்றது பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
What's Your Reaction?