செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அமலக்கத்துறை.. நீதிமன்ற காவல் 42வது முறையாக நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதனமை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 42வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடதக்கது.
இதனிடையே சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கின் மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிது புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும் இந்த மனுக்கள் மீது வாதிட கால அவகாசம் வழங்க கூடாது என்றும் வாதங்களை இன்றே கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக ஜூலை 3 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?