நீட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசின் தீர்மானத்திற்கு முழு ஆதரவு.. தவெக தலைவர் விஜய் அதிரடி

நீட் தேர்வு ரத்து கோரி தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு முழு ஆதரவு தருவதாக நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் கூறியுள்ளார்.கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

Jul 3, 2024 - 10:28
Jul 3, 2024 - 11:00
 0
நீட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசின் தீர்மானத்திற்கு முழு ஆதரவு.. தவெக தலைவர் விஜய் அதிரடி
TVK Leader Vijay About NEET Ban

பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டி, பரிசளிக்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மாற்றுதிறனாளி மாணவி அருகே அமர்ந்தார் விஜய்.

மேடையேறிய விஜய், வந்திருக்கும் இளம் சாதனையாளர்கள், பெற்றோர்கள், த.வெ.க தோழர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். நான் பேச வேண்டாம்னு நினைத்தேன். முக்கியமான விஷயத்தை பத்தி பேசப்போறேன் என்று நீட் குறித்து பேச தொடங்கினார் நடிகர் விஜய்

நீட் என்பது தமிழகத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவை சற்று யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு கடினமான ஒரு விசயம்...


நீட் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது.1975 ஆம் ஆண்டு கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதன்பிறகு ஒன்றிய அரசு வந்த பிறகு அது பொது பட்டியலில் சேர்த்தார்கள்.அது தான் முதல் பிரச்சினையாக இருந்தது. ஒரே நாடு ஒரே பாடத்திட்டங்கள் ஒரே தேர்வு அடிப்படையில் கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன்.மாநில உரிமைகளுக்கு மட்டும் நான் இதை கேட்கவில்லை

பன்முகத்தன்மை என்பது பலம் தானே தவிர பலவீனம் கிடையாது.மாநில சிலபஸ்ல படித்துவிட்டு என்சிஇஆர்டி சிலபஸ்ல தேர்வு வைத்தால் அது எப்படி? கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு கடினாமான விசயம். மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது அதில் சில குளறுபடிகள் நடந்தது என்பதை செய்திகளில் பார்த்தோம். அதன் பிறகு நீட் தேர்வின் மீதான நன்பக  தன்மையே மக்களுக்கு சுத்தமாக போய்விட்டது...நீட் தேர்வு நாடு முழுவதும் தேவையில்லை என்பது தான் நாம் புரிந்து கொண்ட ஒன்று.நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்

ஒன்றிய அரசு காலம் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதனை சீக்கிரமாய் சரி செய்ய வேண்டும்.கல்வியை பொதுப்பட்டியிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதுதான் இதற்கு நிரந்தர தீர்வு.

பொது பட்டியலில் என்ன பிரச்சினை என்று பார்த்தால் அது மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது...
மாநில அரசுகளுக்கு அந்த முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்..

ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ள எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு வேண்டுமென்றால் அவர்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்...
ஆனால் இங்கு என்ன பிரச்சினை என்றால்,நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன் இது நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை அப்படியே நடந்தாலும் அது நடக்க விடமாட்டார்கள் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் நீட் குறித்த என் கருத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்...

Learning is fun... Education is celebration...ஜாலியா படிங்க...அழுத்தம் எடுத்துக்காதீங்க இந்த உலகம் மிகவும் பெரியது வாய்ப்புகள் நிறைய இருக்கிறது நிறைய கொட்டி கிடக்கிறது...ஏதாவது ஒன்று இரண்டு தவறவிட்டாலும் மொத்தத்தையும் விட்டு விடாதீர்கள்...இன்னொரு பெரிய வாய்ப்பை கடவுள் உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று அர்த்தம் அது என்னவென்று தேடி கண்டுபிடிங்கள்...நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என இரண்டு முறை முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow