ஃபோட்டோ எடுக்காதது ஒரு குத்தமாய்யா.. செய்வினை வைக்க வந்துட்டாங்க.. பாக்யலட்சுமி சீரியல் ஹீரோ பகீர்
Baakiyalakshmi TV Serial Actor Sathish Kumar : ஃபோட்டோ எடுக்க மறுப்பு தெரிவித்த சீரியல் நடிகர் வீட்டுக்கு செய்வினை செய்ய எலுமிச்சை பழத்துடன் வந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Baakiyalakshmi TV Serial Actor Sathish Kumar : ஃபோட்டோ எடுக்க மறுப்பு தெரிவித்த சீரியல் நடிகர் வீட்டுக்கு செய்வினை செய்ய எலுமிச்சை பழத்துடன் வந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்ப வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.இது ஒரு இல்லத்தரசியின் கதை. மூன்று குழந்தைகளின் தாயான பாக்யலட்சுமி கணவனின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் எப்படி ஜெயிக்கிறார் என்பதே சீரியலின் கதையாகும்.
குடும்ப பெண்ணாக இருந்து தனக்கு வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வது மற்றும் குடும்பத்திற்காக தியாகங்கள் செய்வது போன்றவற்றை பெண் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றாலும் இணையத்திலும் இந்த சீரியல் குறித்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் பாக்யா தன்னுடைய குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களை யாராலும் செய்ய முடியாது என்று சொல்லும் வகையில் இருக்கிறது.
அதேபோல இந்த சீரியலில் கோபி கேரக்டரில் வில்லனாகவும் காமெடியனாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர் இந்த சீரியலில் வில்லனாக நடித்தாலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.பொது இடங்களுக்கு செல்லும் போது கூட ரசிகர்கள் இவரை அடையாளம் தெரிந்து கொண்டு செல்ஃபி, போட்டோ எடுக்க விரும்புவார்கள். பெரும்பாலான இடங்களில் போட்டோ எடுப்பதை தவிர்த்து விடுவாராம் சதிஷ்குமார்.
கோவிலில் போட்டோ எடுக்க வேண்டும் என்ற பெண் ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்த சதீஷ் குமாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அது போலீஸ் ஸ்டேசன் வரை சென்றுள்ளது. சதீஷ்குமார் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது என தெரிந்து கொள்வோம்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் குமார்,45. இவர் பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கு வந்த 40 வயது மதிக்கதக்க ஒரு பெண் புகைப்படம் எடுக்க முயன்றார். அதற்கு சதீஷ்குமார், இப்போது வேண்டாம், சாமி கும்பிட்டு விட்டு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என நடிகர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த பெண் டிவி நடிகர் சதீஷ் குமாரின் மொபைல் எண்ணை கண்டறிந்து தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை நடிகர் பிளாக் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் நேற்று நடிகரின் வீட்டுக்கு வந்து குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை நடிகரின் வீட்டு வாசலில் வைத்து விட்டு நடிகரை கூப்பிட்டு சத்தம் போட்டார்.
உனக்கு செய்வினை செய்துவிடுவேன் என எச்சரித்து சென்றுள்ளார்.இதனையடுத்து அச்சமடைந்த சதீஷ்குமார், அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாக்யலட்சுமி சீரியலில் இரண்டு திருமணம் செய்து கொண்டு படாத பாடு பட்டு வருகிறார் சதீஷ்குமார். இப்போது பெண் ஒருவர் செய்வினை வைத்து விடுவதாக கூறி மிரட் வருகிறார் என்பது குறிபிடப்படத்தக்கது. போட்டோ எடுக்காம வந்தது ஒரு குத்தமாய்யா என்று புலம்பி வருகிறார் சதீஷ் குமார்.
What's Your Reaction?