பீடைகள்.. பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்.. அதிமுக ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. இந்த வேதாளம் வந்திருப்பதே அந்த பேய்களை ஓட்டுவதற்கு தான் அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலையை வேதாளம் என்று ஜெயக்குமார் கமெண்ட் செய்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். ஒரு பேயை ஓட்டும் போது இன்னொரு பேய் வருகிறது. இத்தனை பேய்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது ஒவ்வொன்றாகத்தான் ஓட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்

Jul 11, 2024 - 12:49
Jul 11, 2024 - 15:50
 0
பீடைகள்.. பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்.. அதிமுக ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி
Annamalai vs Jayakumar

சுதந்திர போராட்ட வீரரான அழகு முத்துகோனின் பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே அழைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவியும் பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது. சமீப காலமாக செல்வப்பெருந்தகையுடன் மல்லுக்கட்டி வருகிறார் அண்ணாமலை. அதற்கு அண்ணாமலை என்கிற வேதாளம் செல்வப்பெருந்தகை மேல் ஏறிவிட்டது என்று கூறியிருந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதற்காக நீண்ட விளக்கத்துடன் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "2015 டிசம்பரில் பாஜக அரசு சார்பில் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளோம்.
வீரமுத்துக்கோனின் சரித்திரம் தமிழ் நாட்டு பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும். அவருடைய அருமை பெருமைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும்.
முதலமைச்சர் இங்கே வந்து மரியாதை செலுத்தியது மகிழ்ச்சி என்றாலும் கூட, தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு உத்தரவிட்டு அழகு முத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

செல்வப்பெருந்தகை குறித்து பேசியதை உண்மையான காங்கிரஸ் தலைவர்கள் பலரும் என்னை தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தனர்.திமுகவினர் புகார் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.காவல்துறையினர் எத்தனை காலத்திற்கு திமுகவின் ஏவல் துறையாக பணி புரிவார்கள்..?

பல பேய்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த வேதாளம் வந்திருப்பதே அந்த பேய்களை ஓட்டுவதற்கு தான். ஒரு பேயை ஓட்டும் போது இன்னொரு பேய் வருகிறது. இத்தனை பேய்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. ஒவ்வொரு பேயாக தான் போய் வேண்டும். இந்த பேய்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களை 70 ஆண்டு காலமாக பிடித்த பீடைகள்.

என் உருவ படத்தை எரிக்க கோயம்புத்தூரில் 10 பேர், திருநெல்வேலியில் 6 பேர் என உருவ பொம்யை தூக்குவதற்தே நான்கு பேர் வந்திருக்கிறார்கள். நான்கு பேர் உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்திருக்கிறார்கள். எரிக்கட்டும் மகிழ்ச்சி தான் சந்தோஷம் தான் என்றார். நான் செல்வபெருந்தகையை முன்னாள் ரவுடி என்று சொன்னது பொய்யா? அதற்கான தரவுகளை வெளியிட்டு இருக்கிறேன். அவரை குண்டா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று சொல்கிறார்கள். அதுவும் பொய். அவருக்கும் தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான குற்றத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதும் பொய். தமிழ்நாட்டில் காங்கிரஸின் வரலாறு இதுதான்.

உண்மையான காங்கிரஸ் தலைவர்கள் பலரும் என்னை தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு நீங்கள் பேசியதற்கு நன்றி. இதை தான் நாங்கள் அகில இந்திய தலைமையிடம் தெரிவித்தோம் என பேசி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கூலிப்படை, ரவுடிகள் வெளியே வந்து சுத்தி கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மீது காவல்துறை தனது வீரத்தை காட்ட வேண்டும்.சும்மா பேசுபவர்கள் மீது திரும்பத் திரும்ப வழக்கு போட்டு, குறிப்பாக சாட்டை துரைமுருகனை டார்கெட் செய்வது நல்லா இல்லை. அவர் எந்த கட்சியைச் சார்ந்த இருந்தாலும் கூட அவர் கூறுவதற்கு கருத்துரிமை உள்ளது. கருத்துரிமையை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும்.

நீங்களும் நானும் எஃப் ஐ ஆர் கொடுத்தால் ஒரு வருடம் ஆனாலும் நடவடிக்கை எடுக்காது. ஆனால் திமுகவினர் புகார் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல்துறை தங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். எத்தனை காலத்திற்கு திமுகவின் ஏவல் துறையாக பணி புரிவார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சரியான நேரத்தில் தக்க படம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow