மகனுக்காக ஓடோடி வந்து பீஸ் கட்டிய தாய் - தெரியாமல் மாணவர் எடுத்த விபரீத முடிவு
இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரையில் கல்லூரி செமஸ்டர் கட்டணத்தை தாய் செலுத்தியது தெரியாமல் பீஸ் கட்ட முடியவில்லை எனக்கூறி மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனான இளமாறன்(18). இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.இந்த நிலையில் இளமாறன் மதுரை புது விளாங்குடி கணபதி நகர் பகுதியில் உள்ள தனது பாட்டியான அமுதாவின் வீட்டில் தங்கியபடி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
கடந்த செமஸ்டர் தேர்வுக்கான 13 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட முடியாத சூழலில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ள மாணவன் இளமாறன் இன்று மதியம் திடீரென வீட்டில் ஆள் இல்லாதபோது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, வீட்டிற்கு வந்த இளமாறனின் பாட்டி அமுதா கதவை தட்டியபோது திறக்காத நிலையில், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது இளமாறன் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.பின்னர் காவல்துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடல் புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கூடல் புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
Read more: மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி
What's Your Reaction?






