எந்த ராசிக்காரர்களை என்ன நோய் தாக்கும்.. என்ன பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம்!
12 ராசிகளுக்கும் வரக்கூடிய பொதுவான நோய்கள் அவரவர் ஜாதகத்தில் உள்ள விதிப்படியே நடக்கும். பொதுவாக ராசிகள் வரக்கூடிய நோய்கள் அனைத்தும் கிரகங்கள். திசா புத்தி கணக்குப்படி தான் வருகிறது.
சென்னை : ராசிகள் நெருப்பு, நிலம், நீர், காற்று என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ராசிகளின் தன்மையைப் பொறுத்து இந்த ராசிக்காரர்களுக்கு நோய்கள்(Rasigal And Diseases) பாதிக்கின்றன. இந்த நோய் வர வேண்டும் என்று விதி இருந்தால் அது விடாது வந்தே தீரும். போவது போயே தீரும். எந்த ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன நோய் தாக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்:
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் காய்ச்சல். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, ரத்த சோகை, ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இவைகள் அனைத்தும் ஏதாவது ஒரு சமயத்தில் வந்து போகும் நோய்கள். இவர்கள் வாழைப்பழம், அத்திப்பழம், ப்ராக்கோலி, பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட நோய்கள் குணமடையும்.
ரிஷபம்:
ரிஷபத்தின் அதிபதி சுக்ரன். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு, பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல் போன்றவை அவ்வப்போது வந்து போகலாம். இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, உப்புச்சத்தால் தான் ரிஷப ராசிக்காரர்கள் கஷ்டப்படுவார்கள். பசலைக்கீரை, காய்கறி சாலட், கிரான்பெர்ரி மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மிதுனம்:
மிதுனத்தின் அதிபதி புதன் கிரகம். இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய்களில் ஒன்று வாதம் ஆகும். நமது உடலில் மார்பு பகுதியில் இந்த ராசி அங்கம் வகிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாயு தொல்லை, தலைவலி, வயிற்றுக்கோளாறு, தீராத மலச்சிக்கல், புதிய தொற்று நோய் வரக்கூடும். மிதுனம் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சிறந்த உணவுகளான பாதாம், மோர், போன்றவற்றை சாப்பிடுவதோடு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.
கடகம்:
மனித உடலில் இதயத்தை அங்கம் வசிக்கும் கடக ராசி, பொதுவாக தண்ணீரால் வரும் நோய்களை உருவாக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரண கோளாறு, காது கோளாறு, தோல் நோய், கெட்ட பழக்கவழக்கத்தால் வரக்கூடிய நோய் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் குறிப்பாக கலோரிகள் அதிகம் நிறைந்த தவறான உணவுகளைத் தான் உட்கொள்வார்கள். ஆனால் சரியான உணவுகளான பெர்ரிப் பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை சாப்பிட்டால் டென்சனும் குறையும் வயிறு பிரச்சினைகளும் நீங்கும்.
சிம்மம்:
ஆவணி மாதம் தென்மேற்கு பருவமழை உச்சத்தில் இருக்கும். சூரியனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்கும் வரக்கூடிய பொதுவான ஒன்று, உடலில் காயம் ஏற்படுவது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நரம்பு தளர்வு, நெஞ்சு வலி, சிறுநீர் பிரச்சினை, கண் காது கோளாறு, பாத வெடிப்பு, கெட்ட பழக்கவழக்கங் களால் வரக்கூடிய நோய்கள் வந்து சேரும். சிம்ம ராசிக்காரர்கள் கடல் உணவுகள், எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதி புதன்.புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் முடக்கு வாதம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் பாதிக்கும். செரிமான பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
துலாம்:
சுக்ரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசி நமது உடலில், அடி வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோயாக பால்வினை நோய் உள்ளது. மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை, கெட்ட பழக்கவழக்கத்தால் வரக்கூடிய தொற்று நோய்கள் போன்றவை அவ்வப்போது வந்து போகும். இந்த ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஆல்கஹால் அருந்துவதையும் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த ராசிக்காரர்கள் பீட்ரூட், சோளம், கேரட், ஆப்பிள், உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும். இதன் தோற்றம் கருந்தேள் போல் இருக்கக் கூடியது. சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் மாதம் கார்த்திகை பிறக்கிறது. இந்த ராசி நமது உடலில் பிறப்பு உறுப்புக்களில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இது தவிர இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் நோய்த்தொற்றுகளால் கஷ்டப்படுவார்கள்.
தனுசு:
குரு பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி தனுசு. இந்த ராசி நமது உடலில் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களாகும். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி, மூச்சுக் கோளாறு, செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொல்லை இருக்கக்கூடும்.தனுசு ராசிக்காரர்களின் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். குறிப்பாக இடுப்பிலும், தொடையிலும் தான் கொழுப்புக்கள் சேரும். இந்த ராசிக்காரர்கள் தானியங்கள், ஸ்கிம்டு மில்க், மீன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.
மகரம்:
ராசி மண்டலத்தில் பத்தாவது ராசியாக இருக்கும் மகர ராசியின் அதிபதி சனி கிரகம் ஆகும். மனித உடலில் முழங்கால்களை ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்றே வரக்கூடிய நோய் மஜ்ஜை நோயாகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் வந்து போகும். மகர ராசிக்காரர்கள் எலும்பு தொடர்பான பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். பட்டாணி, உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, ஓட்ஸ், பால் ஆகியவைகளை சாப்பிடலாம்.
கும்பம்:
நமது உடலில் கணுக்கால்களை ஆதிக்கம் செய்யும் ராசி கும்ப ராசி. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் நரம்பு தளர்வு ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வரக்கூடும். கும்ப ராசிக்காரர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். இதனை தவிர்க்க பேரிக்காய், அத்திப்பழம், எலுமிச்சை, பேரிச்சம்பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
மீனம்:
நமது உடலில் பாதத்தை இந்த ராசி அங்கமாக கொண்டுள்ளது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் சளி மற்றும் காய்ச்சலால் தான் கஷ்டப்படுவார்கள். சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.
What's Your Reaction?