வாஸ்து தோஷம்.. வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் மயிலிறகு.. சிம்பிள் டிப்ஸ்

சென்னை: மயில் தோகை வாஸ்து தோஷத்தையும் கிரக தோஷத்தையும் போக்கக்கூடிய ஒரு பொருளாக உள்ளது. நம்முடைய வீடு நேர்மறை ஆற்றல்கள் நிரம்பியதாக இருக்க வேண்டும். எனவே நம் வீட்டிற்கு முன்பாக நிலை வாசலுக்கு எதிராக மயிலிறகை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஒன்றை மட்டும் வைக்காமல் நான்கு அல்லது 5 மயிலிறகினை சேர்த்து வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றலை வீட்டிற்கு நுழைய விடாமல் தடுக்கும்.

Jul 13, 2024 - 13:11
Jul 13, 2024 - 14:29
 0
வாஸ்து தோஷம்.. வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் மயிலிறகு.. சிம்பிள் டிப்ஸ்
Vastu Dhosam Benefits Of Peacock Feather

பணப்பெட்டி: தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வாகனம் மயில். அந்த மயிலை நாம் புகைப்படமாகவோ அல்லது சிலையாகவோ வீட்டில் வாங்கி வைத்திருப்போம். இது நமது வீட்டிற்கு அழகாக இருப்பதோடு ஆன்மீக ரீதியாக நேர்மறை சக்தியை அதிகரிக்கும்.  நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரைய செலவானால் அதற்கு பரிகாரம் மயிலிறகுதான். நகை வைக்கும் அலமாரியில், பிரோவில் மயிலிறகை வைக்க வேண்டும். இதன் மூலம் வருமானம் கூடும் செல்வம் பெருகும். விரைய செலவுகள் கட்டுப்படும்.

நினைவாற்றல் கூடும்: 

நம்முடைய சிறு வயதில் புத்தகத்திற்குள் சின்னதாக ஒரு மயிலிறகை வைத்து அது குட்டிப்போடுமா என்று பார்த்துக்கொண்டிருப்போம். அப்படி அடிக்கடி பார்க்க பார்க்க நமக்கு நேர்மறை சக்தி அதிகரித்து படிப்பின் மீதான நாட்டம் கூடும். மயிலிறகை பார்க்கும் போதே புத்தகத்தினை புரட்டிப் பார்த்து படிப்போம். படிப்பிலும் கெட்டிக்காரத்தனம் அதிகரித்து இருக்கும். படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் மயிலிறகுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைக்கலாம். குழந்தைகள் படிக்கும் ஸ்டடி ரூமில் மயிலிறகை வைத்து தினமும் வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பூஜை அறையில் மயிலிறகு: 

நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு அறையில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு மயிலிறகு பயன்படும். எட்டு மயிலிறகை எடுத்து ஒன்றாகச் சேர்த்து ஒரு வெள்ளை நிறக் கயிற்றினால் கட்டி பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். " ஓம் சோமாய நமஹ" என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வர வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும். எல்லாமே நம்பிக்கைதான். நம்பிக்கையோடு நாம் செய்யும் எந்த பரிகாரமும் நமக்கு நன்மையை கொடுக்கும்.

வாஸ்து தோஷம் நீங்கும்: 

மயிலிறகு வாஸ்து தோஷங்களை மட்டுமல்லாது கிரக தோஷங்களையும் நீக்கும். மயிலிறகை படுக்கை அறையில் நாம் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நெருக்கமும் கூடும். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.

மதிப்பு கூடும்: 

மயிலிறகு அழகானது மட்டுமல்ல நமது மதிப்பையே அழகாக்கும். அலுவலத்தில் ஏதாவது பிரச்சினை என்றாலோ அதை தீர்க்க  உங்களுக்கு எளிமையான பரிகாரம் மயிலிறகுதான். வீட்டில்  மயிலிறகை வைத்து அதை நீங்கள் பார்த்து விட்டு வெளியே சென்றால் போதும் உங்களின் மீதான மதிப்பு மரியாதை சமூகத்தில் கூடும். மயிலிறகை சின்னதாக நமது ஹேண்ட்பேக், பர்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் அது நல்ல பலனை தரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow