மதுரையில் அனல் காற்று வீசியது ஏன்? 100 ஆண்டுகளுக்குப் பின் பதிவான வெப்பம்..வெதர்மேன் சொன்ன தகவல்
September Month Weatherman Update in Madurai : மதுரையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் நேற்று பதிவாகியுள்ளது. மதுரையில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது, செப்டம்பரில் இதுவே அதிகபட்சமான வெயில் ஆகும். மே மாதத்தில் பதிவாகும் வெப்ப அலைக்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நேற்று அதிகபட்ச வெயில் பதிவானது.
September Month Weatherman Update in Madurai : மேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவே வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள் சுட்டெரிக்கும் என்றும் சென்னையில் இன்றும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் தகித்து வருகிறது. வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசி வருகிறது. இதற்கான காரணத்தில் கூறியுள்ளார் பிரதீப் ஜான்(Pradeep John). அவர் தனது பதிவில், மதுரையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் நேற்று பதிவாகியுள்ளது. மதுரையில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது, செப்டம்பரில் இதுவே அதிகபட்சமான வெயில் ஆகும். மே மாதத்தில் பதிவாகும் வெப்ப அலைக்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நேற்று அதிகபட்ச வெயில் பதிவானது.
சென்னையில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருப்பது செப்டம்பரில் இதுவே முதல்முறை. 22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் நேற்று சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது. கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வெயில் சுட்டெரிக்கிறது.
மதுரையில் இன்றும் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். சென்னையில் இன்றும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். செப்டம்பர் 20-க்கு பிறகு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு, 25-ம் தேதிக்கு பிறகு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பேட்டி அளித்துள்ளார்.
What's Your Reaction?