24 காவல்துறை அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. தமிழக அரசு உத்தரவு - முழு விபரம்

தமிழகம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஸ்டாலின் மயிலாடுதுறை காவல் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

Aug 8, 2024 - 16:13
 0
24 காவல்துறை அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. தமிழக அரசு உத்தரவு - முழு விபரம்
tn government transfer of 24 superintendents of police in tamil nadu

தமிழகம் முழுவதும்  24 காவல்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த சுஜீத் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக மாற்றம்.

தமிழக காவல்துறை போலீஸ் அகாடமி போலீஸ் எஸ்பியாக இருந்த செல்வநாகரத்தினம் சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக மாற்றம்.

சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நிஷா நீலகிரி காவல் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.

ராமநாதபுரம் கடலோர காவல் பாதுகாப்பு குழும எஸ்பியாக இருந்த ஹரிகிரண் பிரசாத் சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையராக மாற்றம்.

திருப்பத்தூர் காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி காவல் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.

திருவண்ணாமலை காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் கோவை மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

நெல்லை நகர காவல்துறை கிழக்கு பிரிவு துணை ஆணையராக இருந்த ஆதர்ஷ் பச்சோரி பெரம்பலூர் காவல் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.

தீவிரவாத தடுப்பு பிரிவு சென்னையின் காவல் எஸ்பியாக இருந்த புக்யா சினேக ப்ரியா சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக மாற்றம்.

சென்னை பூக்கடை காவல் துணை ஆணையராக இருந்த ஸ்ரேயா குப்தா திருப்பத்தூர் காவல் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல் சேலம் மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

சேலம் காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த அருண் கபிலன் நாகை மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

விருதுநகர் காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த பரோஸ்கான் அப்துல்லா கரூர் காவல் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.

நீலகிரி மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த சுந்தரவடிவேல் பூக்கடை காவல் துணை ஆணையராக மாற்றம்.

தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாக இருந்த கண்ணன் விருதுநகர் மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக மாற்றம்.

சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஸ்டாலின் மயிலாடுதுறை காவல் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.

கரூர் மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த பிரபாகர் திருவண்ணாமலை மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த மகேஷ்வரன் தர்மபுரி மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக இருந்த சீனிவாசன் தென்காசி மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

சேலம் நகர காவல்துறை தெற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த மதிவாணன் வேலூர் மாவட்ட காவல் எஸ்பியாக மாற்றம்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் விஜிலென்ஸ் பிரிவின் எஸ்பியாக இருந்த மெக்லினா ஐடன் சென்னை காவல்துறை தலைமையக பிரிவு துணை ஆணையராக மாற்றம்.

சென்னை காவல்துறை சைபர் கிரைம் துணை ஆணையராக இருந்த கீதாஞ்சலி சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றம்.

சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த ரமேஷ் பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow