குடி போதையில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்.. பாடகர் மனோ மகன்களை வலைவீசி தேடும் போலீசார்
மதுபோதையில் 16 வயது சிறுவன், கல்லூரி மாணவரை தாக்கிய வழக்கில் தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள் சாஹீர், ரபிக் ஆகிய இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்- 16 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தலைமறைவான திரைப்பட பாடகர் மனோவின் மகன்கள் பண்ணை வீடுகளில் பதுங்கியுள்ளனரா என காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் தனிப்படை போலீசார் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பண்ணை வீடுகளில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுவருகின்றனர்.
பாடகரின் மகன்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் சிக்னலை கண்காணித்து கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தீவிரமாக போலீசார் தேடி வருவதாக தகவல். 2 பேரின் நெருங்கிய நண்பர்களின் பட்டியலை எடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?