திருமாவளவனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அன்புமணி

சாதி மதம் கட்சிக்கு அப்பாற்பட்டது மது பிரச்சினை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Sep 12, 2024 - 10:09
Sep 12, 2024 - 12:58
 0

தமிழகத்தில் மது, போதைப்பொருட்களால் இளைஞர்கள் அழியும் நிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் 8 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு டிஜிபி சொல்லும் காரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதற்கு முன் 150 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மதுவும், போதைப் பொருட்களும் தான். பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா கிடைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. இதைப்பற்றி முதல்வருக்கு அக்கறையோ, கவலையோ கிடையாது.

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களுக்கு யாரும் அழைப்பும் விடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த 45 ஆண்டுகளாக பாமக மது ஒழிப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகள் மது விலக்கு கொள்கையை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டதற்கு பாமக தான் காரணம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow