வாழ்க்கையில் சந்தோஷத்தை கெடுக்கும் தோஷங்கள்.. திருமண தடை நீக்கும் பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் மாங்கல்ய தோஷம், நட்சத்திர தோஷம், சர்ப்ப தோஷம் என எத்தனையோ தோஷங்கள் பெண்களின் திருமணத்திற்கு தடைக்கற்களாக இருக்கின்றன. இதற்கான பரிகாரங்களை ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

Aug 27, 2024 - 17:42
 0
வாழ்க்கையில் சந்தோஷத்தை கெடுக்கும் தோஷங்கள்.. திருமண தடை நீக்கும் பரிகாரங்கள்
marriage dosha remedies for delay marriage

சென்னை: காலம் இருக்கிற இருப்புக்கு சூரியனுக்கே ராக்கெட் விட்டுறலாம். அது ஒரு மேட்டரே அல்ல. ஆனால் வரன் தேடி அலைந்து அந்த வரனும் மனதுக்குப் பிடித்த மாதிரி அமைவது இருக்கே? குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதைதான். இதில் ஆண் பிள்ளைகளை பெற்ற பாடுதான் இப்போது பெரும் பாடாக இருக்கிறது. என்ன சொன்னாலும் ஆறாது, எழுதினாலும் தீராது.சிலருக்கு இளமையில் திருமணம் நடந்துவிடும். கொடுத்து வைத்தவர்கள். சிலருக்கு எல்லா வளமும் இருந்தும் இந்தக் கல்யாணம் மட்டும் கைகூடாமல் தட்டி போய்க்கொண்டே இருக்கும். தோஷங்கள் மட்டுமே நம்முடைய சந்தோஷங்களை கெடுத்துக்கொண்டிருக்கும். அதற்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.

தோஷங்கள்: 

மங்களகாரகன் எனப்படும் செவ்வாய்  பெண்ணின் மாங்கல்யத்திற்கு தடையாக அமைந்து விடுகிறது. மாங்கல்ய தோஷமும், சர்ப்ப தோஷமும் மணமாலை கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. செவ்வாய் தோஷம் ஊர் அறிந்த ரகசியம். இன்னொன்று இருக்கிறது புனர்பூ தோஷம். தாமத திருமணத்திற்கு உரிய காரணிகள் என்றாலும் பிரபலம் இல்லை. பிரபலம் பெயரில் தான் இல்லையே தவிர, தருகிற பலன் சூப்பர் வில்லன். அடுத்து நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம்.  1, 7 மற்றும் 2, 8ல் ராகு கேது அமர்வதால் ஏற்படுவது. இந்த கிரக நிலையைப் பார்த்தாலே ஜோதிடர்கள் சொல்லாமல் விடுவதில்லை. 

நட்சத்திர தோஷம்: 

இது தவிர்த்து இருக்கிறது நட்சத்திர தோஷம். இதுவும் ரொம்பப் பிரபலம். ஆயில்ய தோஷம். மாமியாருக்கு ஆகாது. ஆயில்யம் இல்லாத இடமா பார்க்கணும். மூல நட்சத்திர தோஷம். மாமனாரை மூலையில் முடக்கிப்போடும். ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம். கேட்டை நட்சத்திர தோஷம் மூத்த கொழுந்தனாருக்கு ஆகாது. விசாக நட்சத்திர தோஷம். இளைய கொழுந்தனுக்கு ஆகாது என்று கட்டம் கட்டி விடுவார்கள். ஒரு வகையில் இவர்களும் பாவம் செய்தவர்கள்தான் போலும்.

மாமியார், மாமனாரின் ஆயுள்

அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமனாரை குறிக்கும் இடம் 3ம் பாவம். இவ்விடத்தில் முன் சொல்லியது போல் சனி அல்லது ராகு கேது இருந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசம் அல்லது வக்கிரம் பெற்று காணப்பட்டால் மாமனார் ஸ்தானம் வலுகுன்றும். மற்றபடி ஆயுளை நிர்ணயிப்பது மாமனார் ஜாதகமே என்கின்றனர் ஜோதிடர்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரை குறிக்கும் இடம் பத்து. அந்த வீட்டில் ராகு கேது அல்லது சனி இருந்து அந்த வீட்டுக்கு உரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசமாகவோ, அல்லது வக்கிரம் பெற்ற நிலையிலோ இருந்தால் மாமியார் ஸ்தானம் வலுகுன்ற வாய்ப்புண்டு. அதேசமயம் மாமியாரின் ஆயுள் பலத்தைச் சொல்ல மாமியாரின் ஜாதகத்தைப் பார்ப்பதுதான் நல்லது. 

பரிகாரம் என்ன?

செவ்வாய் சந்திரன் வீட்டில் நீச்சம் மற்றும் குரு உச்சம் பெரும் இடத்தில நீச்சம் பெற்றிருந்தால் அதிக தண்ணீர் குடிப்பதும், தியானம் செய்வதும், தெய்வ ஸ்லோகங்கள் அடிக்கடி உச்சரிப்பதும் இதற்கு பரிகாரம். திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடை பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை  வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை  செய்து வழிபட திருமணம் கை கூடும். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட திருமணம் நடைபெறுவதில் இருந்த  தடை நீங்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow