Sattur Firecrackers Factory Blast : சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து..உடல் கருகி உயிரிழந்த தொழிலாளி

Sattur Firecrackers Factory Blast Accident : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன் பாறை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒரு தொழிலாளி உயிரிழப்பு ஒருவர் படுகாயம் காவல்துறையினர் விசாரணை.

Sep 19, 2024 - 12:00
Sep 19, 2024 - 12:08
 0
Sattur Firecrackers Factory Blast : சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து..உடல் கருகி உயிரிழந்த தொழிலாளி
one died sattur fire cracker office accident one injury

Sattur Firecrackers Factory Blast Accident : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. படுகாயங்களுடன் ஒரு தொழிலாளி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் குகன் பாறை பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் இன்று தொழிலாளர்கள் பணிகளை வழக்கும் போல் தொடங்க முயன்ற போது மருந்து கலவைகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து என்பது ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மேலும் குருமூர்த்தி என்ற தொழிலாளி படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow