கேரளாவில் நள்ளிரவில் கதவை தட்டுவார்கள்.. மெட்டி ஒலி மாமியார் சாந்தி வில்லியம்ஸ் பரபர புகார்
தமிழ் திரையுலகில் 70, 90 வயது நடிகைகளின் அறை கதவுகளையும் தட்டுகிறார்கள் என்றார் அம்மா நடிகையான சாந்தி வில்லியம்ஸ். இது தொடர்பாக பிரபல அம்மா நடிகையான சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.
மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் மீது சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரை உலகத்தில் புயலை கிளப்பி வரும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக பிரபல அம்மா நடிகையான சாந்தி வில்லியம்ஸ் பேசியிருக்கிறார்.
மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து பல நடிகைகள் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள சினிமா சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் விலகி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து பேசியுள்ள சாந்தி வில்லியம்ஸ், மலையாள திரையுலகத்தை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. காரணம் அங்கு அரசியல் அதிகம்.அங்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் அந்த திரை துறையில் பாதுகாப்பாக செல்ல முடியாது. 66 வயதில் இருந்து 98 வயது வரையிலான கிழவி அங்கு வந்தாலும் கூட இரவில் அவர்களது கதவை தட்டக்கூடிய ஆண்கள்தான் அங்கு இருக்கிறார்கள்.
இது எனக்கு பிடிக்காத விஷயம். நான் சில காலமாக படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் திரையுலகத்தில் எனக்கு அப்படி இல்லை. அவர்கள் ஒருபோதும் எங்களின் கதவுகளை தட்டவில்லை. எங்களிடம் தவறாகவும் நடந்து கொண்டதில்லை.நம்முடைய தமிழ் திரைத்துறையில் என்னை ஒருவர் கூட தவறான முறையில் அணுகியது கிடையாது. அதேபோலத்தான் ஆந்திர திரைத்துறையும், அவர்களும் மிகவும் கண்ணியமாக என்னிடம் நடந்து கொண்டார்கள். இங்கு உள்ளவர்கள் ஓரளவுக்கு உணர்வுகளை புரிந்தவர்கள். அதையும் மீறி சிலவை நடக்கிறது என்றால் அது வேறு. அதை நாம் குறை சொல்ல முடியாது. அதற்கு நாம் தடை விதிக்க முடியாது. காரணம் என்னவென்றால், அவரவர்களுக்கு தனிப்பட்ட விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது.
இன்று நிறைய நடிகைகள் அந்த நடிகர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார். இந்த நடிகர் என்னை அங்கு கூப்பிட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் கூப்பிட்டார்கள் என்றால், உங்களுக்கு விருப்பம் இருந்தால் செல்லுங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று சொல்லலாம். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி விடுங்கள் என்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.
மோகன்லால் தன்னுடைய வாழ்க்கையில் செய்த நம்பிக்கை துரோகத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். என்னுடைய கணவர் இயக்கி, ஒளிப்பதிவு செய்த பல திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். என்னுடைய கணவர் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டார் என்ற போது ஒரு சின்ன உதவி கூட மோகன்லால் செய்யவில்லை. அதைக்கூட நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய கணவர் இறந்த பிறகு அது பற்றி மோகன்லால் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏதோ ஒரு ஆளிடம் ஒரு நாள் நாம பேசினால் கூட அந்த ஆள் இந்த உலகத்தில் இல்லை என்றால் நமக்கு ஒரு வருத்தம் வரும். ஆனால் மோகன்லால் என்னுடைய வீட்டில் பல நாட்கள் சாப்பிட்டு இருக்கிறார்.
நானே அவருக்காக கர்ப்பமாக இருக்கும் போது கூட கஷ்டப்பட்டு நடந்து சென்று பணம் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய கணவர் இறப்பு பற்றி அவர் விசாரிக்கவில்லை. நேரில் தான் வந்து பார்க்கவில்லை என்றாலும் ஒரு முறை நான் ஏர்போர்ட்டில் இருந்தேன் அப்போது விமானத்தில் மோகன்லால் இருந்தார். அதே விமானத்தில் நானும் இருந்தேன். ஆனால் அப்போது கூட மோகன்லால் என்னிடம் பேசவே இல்லை. என்னை பார்த்ததும் பார்க்காதது போல சென்று விட்டார். நான் இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தேன். அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது பற்றி என்னுடைய நண்பர்கள் பலரும் நீங்கள் கேரளாவிற்கு சென்று விடாதீர்கள் உங்களை அடிக்க ஆள் வைத்து இருப்பார்கள் என்று மிரட்டுகிறார்கள்.
ஆனால் நான் அதற்கெல்லாம் பயப்படவே இல்லை. ஒருத்தங்க செஞ்ச உதவியை ஒரு செகண்ட் கூட நினைத்துப் பார்க்காத மனுஷங்கள் இருக்கிறார்கள் என்றால் அது மோகன்லால் ஆகத்தான் இருக்கும். அவங்களே நன்றாக பயப்படாமல் இருக்கும்போது நாம ஏன் பயப்படனும்? எனக்கு என்னுடைய கணவர் பெயர் வில்லியம்ஸ் என்னுடைய பெயருக்கு பின்னாடி இருக்கிற வரைக்கும் நான் எந்த இடத்திலும் பயப்பட மாட்டேன் என்றும் சாந்தி வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
What's Your Reaction?