மை வி3 ஆட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமீன் மனு தள்ளுபடி
My V3 Ads Owner Sakthi Anandan Bail : விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, மோசடி செய்த வழக்கில் கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
My V3 Ads Owner Sakthi Anandan Bail : மை வி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக அச்செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீது கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, சக்தி ஆனந்தன், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்ககளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு கடந்த ஐந்தாம் தேதி சரணடைந்தார். அவரை ஜூலை 19 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா, சக்தி ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?