GOAT: “அரசியலில் விஜய்... சினிமாவில் சிவகார்த்திகேயன்..” இனி எங்க ஆட்டம்... வைரலாகும் கோட் வீடியோ!

விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்துள்ளது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. விஜய் – சிவகார்த்திகேயன் நடித்துள்ள காட்சியில் வரும் வசனம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Sep 5, 2024 - 09:40
Sep 5, 2024 - 17:29
 0
GOAT: “அரசியலில் விஜய்... சினிமாவில் சிவகார்த்திகேயன்..” இனி எங்க ஆட்டம்... வைரலாகும் கோட் வீடியோ!
விஜய் - சிவகார்த்திகேயன்

சென்னை: இந்தாண்டு தமிழில் உருவானதில் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல், இப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
இதனை கோட் ரிலீஸாகும் வரை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருந்தது. இந்நிலையில், இன்று கோட் படம் வெளியானதில் இருந்தே விஜய்யுடன் சிவகார்த்திகேயனும் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார். சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அப்போது ஒரு விருது விழாவில் பங்கேற்ற விஜய், சிவகார்த்திகேயன் கிட்ஸை பிடித்துவிட்டார் என மேடையில் வைத்தே பாராட்டியிருந்தார். அப்போது முதல் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இடம்பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ்ஸாக அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யும் சிவகார்த்திகேயனும் பேசிக்கொள்ளும் வசனம் தான் இப்போது டாக் ஆஃப் டவுன்-ஆக உள்ளது. அதாவது சிஎஸ்கே ஜெர்ஸியில் என்ட்ரியாகும் சிவகார்த்திகேயனிடம், ஒரு துப்பாக்கியை கொடுக்கிறார் விஜய். அதோடு, “கிரவுண்ட்ல இருக்கும் ஆயிரக்கணக்கானவங்களோட உயிர் இப்ப உங்க கைல தான்” என சொல்ல, தியேட்டரே சும்மா தெறிக்குது. அதற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷனும் பதிலும் தான் தெறி மாஸ்.

”நீங்க இதவிட எதோ முக்கியமான வேலையா போறீங்கன்னு நினைக்கிறேன், நீங்க அத பாருங்க சார், நான் இத பாத்துக்கிறேன்” என தக் லைஃப் கொடுத்துள்ளார் சிவா. அதாவது, இந்த வசனம் விஜய் அரசியலுக்கு செல்லவிருப்பது குறித்தும், அதனால் இனி சினிமாவில் விஜய் இடத்திற்கு சிவகார்த்திகேயன் தான் வருவார் என்பதை குறிக்கும் விதமாகவும் வெங்கட் பிரபு வசனம் வைத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்த நாள் முதல், சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். 

இப்போது அதனை விஜய்யே உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. சினிமாவில் எனது இடத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் வர வேண்டும் என விஜய்யே கூறிவிட்டதாக எஸ்கே ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். கோட் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார் வெங்கட் பிரபு. அதன்படி, வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் கோட் சீக்வெல்லாக இருக்கலாம் எனவும் ரசிகர்களிடம் பேச்சு எழுந்துள்ளது. அதனால் தான் வெங்கட் பிரபு தனது கோட் படத்தில் சிவகார்த்திகேயனை கேமியோவாக நடிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க - விஜய்யின் கோட் திரைப்படம் எப்படி இருக்கு... முழு விமர்சனம் இதோ!

இதற்கெல்லாம் எப்போது விடை கிடைக்கும் என தெரியவில்லை. ஆனால், இப்போதைக்கு சினிமாவில் விஜய் இடத்திற்கு அடுத்து வரவிருப்பது சிவகார்த்திகேயன் தான் என கோட் படம் மீது சத்தியம் செய்து கூறி வருகின்றனர் ரசிகர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow