JayamRavi: ”ஆர்த்தி சொல்றது உண்மை கிடையாது... நீதிமன்றத்தில் உண்மை தெரியும்..” ஜெயம் ரவி ஓபன் டாக்!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு என்றும், இதனால் நான் வேதனையில் இருப்பதாகவும் அவரது மனைவி ஆர்த்தி பதில் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், தனது விவகாரத்து சர்ச்சை குறித்து நடிகர் ஜெயம் ரவி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

Sep 20, 2024 - 19:32
 0
JayamRavi: ”ஆர்த்தி சொல்றது உண்மை கிடையாது... நீதிமன்றத்தில் உண்மை தெரியும்..” ஜெயம் ரவி ஓபன் டாக்!
விவாகரத்து சர்ச்சை - ஜெயம் ரவி விளக்கம்

சென்னை: கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ஜெயம் ரவி, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த ஜெயம் ரவி, கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் வைரலாகி வருகிறார். தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை தான் இதற்கெல்லாம் காரணமே. மனைவி, இரண்டு மகன்கள் என மகிழ்ச்சியாக சென்றுகொடிருந்த ஜெயம் ரவியின் வாழ்க்கையில், விவாகரத்து என்ற புயல் அடிக்க என்ன காரணம் எனத் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

அதேநேரம், ஜெயம் ரவி தன்னிடம் சம்மதம் கேட்காமல் விவாகரத்து முடிவு எடுத்துள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து முடிவு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது, இதுகுறித்து தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனக் கூறியிருந்தார். மேலும், ஜெயம் ரவியின் இந்த முடிவால் எனது மகன்களின் எதிர்காலம் குறித்து கவலையாக இருப்பதாகவும் ஆர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்தி வைரலாகி வந்தது. 

இந்நிலையில், தனது விவாகரத்து முடிவுக்கான காரணம் குறித்து ஜெயம் ரவி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில விஷயங்கள் சமீப காலமாக வைரலாகி வருகிறது. இதுவரை நான் அதுகுறித்து பேசாமல் அமைதியாக இருந்தேன். அது எனது ஸ்பீடு பிரேக்கராக எடுத்துக்கொள்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால் எப்போதும் போல தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் எனவும், செல்லும் இடங்களில் ரசிகர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருப்பேன் எனவும் கூறினார்.

விவாகரத்து குறித்து எனது மனைவி ஆர்த்தி அவரது கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்குத் தெரியாமல் இது நடக்கவில்லை, இதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அதன்பின்னர் தான் முறைப்படி மீடியாவில் இந்த தகவலை வெளியிட்டேன். எனது படங்களின் ப்ரோமோஷன் வேலைகள் இருப்பதால், அதற்கு முன்பாகவே விவாகரத்து குறித்த அறிக்கையை வெளியிட்டேன். எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எனது பெற்றோர்களின் விருப்பம். இந்த விஷயத்திலும் அவர்கள் அப்படியே இருக்கின்றனர், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

அதேபோல் எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்களில் முதல் மகன் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் ஏற்கனவே விவாகரத்து குறித்து அவனிடம் பேசிவிட்டேன். ஆனாலும் அவர்களுக்கு நான் ஆர்த்தியை பிரிவதில் விருப்பம் இல்லை. இருப்பினும் சூழல் காரணமாக நான் ஆர்த்தியை பிரிய முடிவு செய்தேன். அதேநேரம் எனது மகன்களை கைவிடும் எண்ணம் எனக்கு கிடையாது. சமீபத்தில் கூட எனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்தே கொண்டாடினோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிமேல் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும், அப்போது பல உண்மைகளும் தெரியவரும். 

இந்நிலையில், எனது மாமியார் என்னை வைத்து படம் தயாரித்ததாகவும், அதனால் தான் விவாகரத்து செய்வதாகவும் செய்திகள் வெளியாகின. இது எல்லாவற்றுக்குமான பதில்களும் நீதிமன்றத்தில் தெரியும். அதேபோல், ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி அதிகளவில் பேசி வருகின்றனர். ஆனால், நானும் அவரும் ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் தான் சந்தித்தோம். இருவரும் அப்படியொரு ஆன்மிக அமைப்பு தொடங்குவது குறித்தும் திட்டமிட்டிருந்தோம். ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல் எங்களை தவறாக பேசி வருகின்றனர். என்னைப்பற்றி தவறாக பேசுவதை ஏற்றுக்கொள்ளலாம், ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசலாமா? என ஜெயம் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க - ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து படத்தின் டிவிட்டர் விமர்சனம்

இதேபோன்று தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது ஒரு நடிகையுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக பேசினார்கள். ஆனால் அந்த நடிகைக்கு தற்போது நிச்சயதார்த்தமே நடந்துவிட்டது. என் விஷயத்தில் இப்படி பல தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஊரில் எத்தனையோ பேர் விவாகரத்து செய்கிறார்கள், ஆனால் நான் சினிமாவில் இருப்பதால் இது பரபரப்பாக பேசப்படுகிறது. நான் எப்போதும் சந்தோஷமாக தான் இருக்கிறேன், என் வாழ்வில் எந்த வேதனையும் துக்கமும் கிடையாது. இதனால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன், இந்த விவாகரத்து பிரச்சினைக்கும் சினிமாவுக்கும் தொடர்பில்லை என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow