பரந்தூர் போராட்டம்.. விஜய் வருகையையொட்டி எல்லையில் போலீஸார் குவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
![பரந்தூர் போராட்டம்.. விஜய் வருகையையொட்டி எல்லையில் போலீஸார் குவிப்பு](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_678dbb04a421a.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரத்து 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை
இந்த போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில் கிராமத்திற்குள் அரசியல் தலைவர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
விஜய் அங்கு செல்வதால் கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு வழங்ககோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த போலீஸார் பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். அதாவது, காவல்துறை அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் விஜய் மக்களை சந்திக்க வேண்டும்.
பரந்தூர் ஏகனாபுரத்திற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்கத்தில் , அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் வரவேண்டும்.
மேலும் படிக்க: முதுகலை பொறியியல் படிப்பு.. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு
கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இந்நிலையில், விஜய் வருகையொட்டி பரந்தூருக்கு 10 கிலோமீட்டர் முன்பு இருக்கக்கூடிய கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் முதன் முதலாக களத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)