தங்கம் விலை மீண்டும் உச்சத்தில்..1 சவரன் ரூ.54,600 - நகை பிரியர்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 காசு உயர்ந்து ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 காசு உயர்ந்து ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை ஆசியச் சந்தையில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்க டாலர் சரிவு மற்றும் அமெரிக்காவின் உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) குறைவாக இருந்ததால், பெடரல் ரிசர்வ் (Fed) வட்டி விகிதத்தை அதிகமாகக் குறைக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த சில நாட்களில் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டம் துவங்க இருக்கும் வேளையில் நேற்றைய அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 53 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.இது இந்தியா தங்க சந்தையில் எதிரொலித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 12)ஒரு சவரனுக்கு ரூ 960 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ 6825 க்கும் ஒரு சவரன் ரூ 54,600 க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 3.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 95 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 95,000க்கும் விற்பனையாகிறது. திருமண சீசன் காலமாக இருப்பதால் நகை வாங்குபவர்கள் இந்த விலை உயர்வினால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
What's Your Reaction?