Savukku Shankar Case : சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை.. தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

Savukku Shankar Case : உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

Aug 14, 2024 - 17:13
Aug 15, 2024 - 09:54
 0
Savukku Shankar Case : சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை.. தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!
Savukku Shankar Case

Savukku Shankar Case : தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

அதாவது கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர்(Savukku Shankar Case) மீது வழக்குகள் பாய்ந்தன. சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மற்ற மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. மேற்கண்ட 16 வழக்குகளில் 12 வழக்குகளில்  சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.

இதற்கிடையே சவுக்கு சங்கர்(Savukku Shankar Goondas Act) மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை எதிர்த்து அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 12 வழக்குகளில் ஜாமீன் கிடைத்து விட்டதால், மீதியுள்ள வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவார் என தகவல் வெளியானது.

ஆனால் சவுக்கு சங்கர்(Savukku Shankar Case) மீது மீண்டும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்தது. வாகனத்தில் அவர் 2 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதனை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார். அரசு தரப்பிலும் நீதிபதி வாதங்களை முன்வைத்தார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கர்(Savukku Shankar) தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் ஜாமீன் வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், என்னென்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி  சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்டனர். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சவுக்கு சங்கர்(Savukku Shankar Case) மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'இது திமுக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று கூறியிருந்தார். இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசின் கார்த்தி சிதம்பரமும், ''சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போட்டது தேவையற்றது'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow