DMK Minister Rajakannappan : வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் ஸ்டாலின் - அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம்

DMK Minister Rajakannappan : காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Aug 24, 2024 - 19:47
Aug 25, 2024 - 12:46
 0
DMK Minister Rajakannappan : வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் ஸ்டாலின் - அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம்
அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம்

DMK Minister Rajakannappan : திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளை ஊக்குவித்து 51% பேர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என தமிழ்நாட்டில் திராவிட பூமி ஆட்சிதான். வேறு கட்சி ஆட்சி செய்ய முடியாது. தேசிய கட்சிகள் ஆட்சி செய்ய முடியாது. திராவிட கட்சி மட்டுமே ஆட்சி செய்ய முடியும். 2026-ல் தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வராக வருவார். ஜாதி மத பேதமின்றி தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூரில் சுதந்திரத்திற்கு பின் குடிநீர் இல்லை, முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகே குடிநீர் கிடைத்தது. பதவிக்கு வருவது எளிது ஆனால் அதை  தக்க வைப்பது கஷ்டம்” என கூறினார்.

இதைத் தொடர்ந்து திமுக அரசு ஜாதி பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்றால் மற்ற கட்சிகள் ஜாதி பாகுபாடு பார்க்கிறதா என்று அவரிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நாம் பாகுபாடு பார்க்கவில்லை என தான் கூறினேன். யாரையும் குறை கூறவில்லை. அனைவரும் ஜாதி பாகுபாடு பார்க்காமல் இருந்தால் தமிழ்நாடு செழிக்கும். முதலமைச்சர் ஸ்டாலின்  ஜாதி பாகுபாடு பார்க்காமல் செயல்பட்டு வருகிறார்” என தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ உள்ளாட்சி அமைப்புகளில் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினமானது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளாட்சி பிரதிநிதிகள்தான். குடிநீர் வரவில்லை என்றால் எம்எல்ஏவை கேட்கமாட்டார்கள். எம்பி எங்கு இருக்கிறார் என்பது கூட மக்களுக்கு தெரியாது. கவுன்சிலர்களை தான் கேட்பார்கள். லைட் எரியவில்லை என்றால் அமைச்சர்களைத் திட்டமாட்டார்கள். கவுன்சிலர் என்ன செய்கிறார் என்று தான் திட்டுவார்கள். உள்ளாட்சி அமைப்பில் பணியாற்றி நல்ல பெயர் வாங்குவது அரிதான விஷயம். உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளால் தான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.  1986ல் எம்ஜிஆர் நேரடியாக பிரச்சாரம் செய்தும் திமுக உள்ளாட்சியில் வெற்றி பெற்றது. அதன் பிறகுதான் 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தது. உள்ளாட்சியில் செயல்படுவதை பார்த்துதான் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள். திருவள்ளூரில் அரசியல் செய்து விட்டால் ஐ.நா. சபைக்கு சென்றும் அரசியல் செய்யலாம். எம்ஜிஆரின் வளர்ச்சிக்கு காரணம் தாய்மார்களை மத்தியில் செல்வாக்கு வர காரணம், அவரது தாயை மதித்ததுதான். கருணாநிதி 1954ல் கட்டிய வீட்டிற்கு தனது தாய் அஞ்சுகம் பெயரைதான் சூட்டினார். தாயை மதிதத்தவர்கள் யாராக இருந்தாலும் பொருளாதாரத்திலும், அரசியலிலும், சமூகத்திலும் நன்றாக வருவார்கள்” என்றார். 

மேலும் படிக்க: 'கலைஞர் எனும் தாய்' நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு!

மேலும், “இந்தியாவில் கல்வியில் முதலிடம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே  தமிழ்நாட்டில் தான் 42% பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். கல்வி மற்றும் பாதுகாப்பு தமிழகத்தில் நிறையவே உள்ளது” என்றார். இதையடுத்து பாஜகவும், திமுகவும் வருங்காலத்தில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “இன்று முரசொலியில் வந்துள்ள கார்ட்டூனை பாருங்கள் புரியும். ஆளுநரை பாஜக ஒரு கை பிடித்து செயல்படுத்துவது போல கார்ட்டூன் வெளியாகியுள்ளது. ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாலேயே கூட்டணி என கூறுவது அரசியலில் பக்குவம் இல்லாதவர்கள் பேசுவது ஆகும். பேரறிஞர் அண்ணா காமராஜரை அழைத்துச் சென்று விருந்து கொடுத்த மறுநாளே காமராஜரை விமர்சித்து பேசி உள்ளார்.  பழனியில் நடைபெற்று வரும் முருகன் மாநாடு என்பது வாக்கு அரசியலுக்கானது என தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்வது அவருக்கு முருகன் மீது பக்தி இல்லாததை காட்டுகிறது.  பாஜகவில் சேர்ந்ததற்கு பிறகு திருச்செந்தூர் முருகனை தமிழிசை மறந்துவிட்டார்.  திருச்செந்தூர் தூத்துக்குடி தொகுதியில் வருகிறது. அந்த ஊர் மக்கள் வாக்களிக்காததால் மக்கள் மீதுள்ள கோபத்தை முருகன் மீது தமிழிசை காட்டுகிறார். விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும் திமுகவிற்கு பாதிப்பில்லை.  திமுக ஜேம்ஸ் நதி போன்றது” என தெரிவித்துள்ளார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow