மனோ மகன்களுக்கு தர்ம அடி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்... குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10 க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Sep 20, 2024 - 20:03
 0
மனோ மகன்களுக்கு தர்ம அடி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்... குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!
மனோ மகன்களுக்கு தர்ம அடி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகர் 10 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன்(20). 3 ஆம் ஆண்டு கல்லூரி மாணவரான கிருபாகரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது ஐ.டி.ஐ படித்துவரும் சிறுவனும், நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்கள் இருவரும், கடந்த 10 ம் தேதி வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் ஏ.கே.ஆர் நகரில் உள்ள கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளனர். பின்னர், இரவு 11.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள திரைப்பட பாடகர் மனோ வீட்டின் வழியே சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக்(35), சாஹிர்(38) மற்றும் இவர்களது நண்பர்கள் 2  நபர்கள், நடந்து சென்ற கிருபாகரனையும் சிறுவனையும் அழைத்து எதற்காக இங்கு நிற்கின்றீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே மதுபோதையிலிருந்த பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக் மற்றும் சாஹிர் அவரது நண்பர்கள் சேர்ந்து கிருபாகரன் மற்றும் அவரது நண்பரை தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தனர். கிருபாகரனுக்கு பின்னந்தலையில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் சிறுவனுக்கு உள் காயம் மற்றும் வெளிப்புற காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருபாகரன் மற்றும் அவரது நண்பரை மதுபோதையிலிருந்த பாடகர் மனோவின் மகன்கள் ஆபாசமாக பேசி கட்டையால் தாக்க முற்படுவதும் பின்னர் கைகளால் தாக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சிப்பதிவுகள் அடிப்படையில் தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுப்பட்ட விக்னேஷ்(28), தர்மா(23) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக் மற்றும் சாஹிர் ஆகிய இருவரை வளசரவாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10 க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா 11ம் தேதி மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக பாடகர் மனோவின் மகன்களை காரில் வந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதனை அடிப்படையாகக் கொண்டு பாடகர் மனோவின் மகன்கள் மற்றும் மனைவி ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேகொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow