சினிமாவில் மட்டுமா நடக்கிறது.. பாலியல் சீண்டல் எல்லா இடத்திலும் உள்ளது.. நடிகை குஷ்பு
நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை என நடிகை குஷ்பு கூறியுள்ளார். சென்னை கிண்டியில் பேட்டியளித்த குஷ்பு, நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.
எல்லா துறைகளில் பணியாற்றக்கூடிய பெண்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது. சினிமா துறைமீது மட்டும் ஏன் பழி போட வேண்டும் என குஷ்பு கேட்டுள்ளார். பெண்கள் பணியாற்றக்கூடிய துறைகளில் ஒரு கமிட்டி இருக்க வேண்டும். சினிமா துறையிலும் கமிட்டி இருக்க வேண்டும் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
What's Your Reaction?