லண்டன் செல்லும் அண்ணாமலை.. பாஜக பொறுப்பு தலைவராகும் கேசவ விநாயகம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்த படிப்புகளை படிப்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் செல்கிறார்.தமிழ்நாடு பாஜக பொறுப்பு தலைவராக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 27, 2024 - 16:28
 0
லண்டன் செல்லும் அண்ணாமலை.. பாஜக பொறுப்பு தலைவராகும் கேசவ விநாயகம்
kesava vinayagam

தமிழக பாஜக பொறுப்பை மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 3 மாதங்கள் அரசியல் சார் படிப்பினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இருப்பதால் தமிழ்நாடு பாஜக பொறுப்பு தலைவராக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒரு 3 மாத காலம் தூரத்தில் பயணம் செய்ய வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது. என் வாழ்க்கையில் இது முதல் முறை. இந்த 3 மாதம் தமிழகத்தை தாண்டி எங்கே இருந்தாலும் கூட என் இதயம் தமிழகத்தில் தான் இருக்கும்.

இத்தனை காலமாக எப்படி சண்டை போட்டோமோ, மூன்று மாத காலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருந்தாலும் கூட தொடர்ந்து என்னுடைய சண்டை இருக்கும். ஆளுங் கட்சியோட தவறுகளாக இருந்தாலும், முக்கியமான விஷயங்களிலும் நேரம் கொடுத்து, பார்த்து அறிக்கை மூலமாக என்னுடைய கருத்துக்களை தெரிவிப்பேன். எங்களுடைய தலைவர்கள் இதனை பார்த்து கொள்வார்கள். நவம்பர் மாதம் கடைசியில் வருவேன் என்று அண்ணாமலை கூறினார்.

இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலை இந்த முறை தேர்வாகி உள்ளார். இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம். அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வெளியானது. 
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக பொறுப்பு தலைவராக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு கடந்த மாதமே  செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம், என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார். லண்டனில் இருந்தாலும் அறிக்கை மூலம் சண்டை செய்வேன் என்ற கூறியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே அடுத்த தலைவர் யார் என்ற உண்மை தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow