நாங்கள் இந்தியர்கள் இல்லையா.. கொந்தளித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்

Thamizhachi Thangapandian Speech at Parliament : தமிழர்கள் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்

Jul 25, 2024 - 17:41
Jul 26, 2024 - 16:56
 0

Thamizhachi Thangapandian Speech at Parliament : தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன் கடுமையான கருத்துக்களை முன்வைத்தார். 

தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் நிதிநிலை அறிக்கை.தமிழர்கள் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? ஏன் புறக்கணிக்கப்படுகிறோம்
8 முறை பிரதமர் தமிழ்நாட்டு வந்தும், ஒரு தொகுதியிலும் இங்கு வெல்லவில்லை, ஆக பழிவாங்கப்பட்டுள்ளோம். உலகெங்கும் என் குடும்பம் என பிரதமர் கூறுவது இதுதானா?. தலா 5 முறை ஆந்திரா, பீகார்  என்றார். தமிழ்நாடு, கேரளா என தென்மாநிலங்களின் பெயர்கள் ஒருமுறை கூட சொல்லவில்லை.

சென்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது, இதுவரை கேட்ட நிதி கிடைக்கவில்லை.கூட்டணிக் கட்சிகளை மட்டுமே திருப்திப்படுத்தாத பட்ஜெட். தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow