மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்... உக்கிரமடையும் போர்!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம் நேற்று (ஆகஸ்ட் 20) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Aug 21, 2024 - 20:24
Aug 22, 2024 - 10:07
 0
மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்... உக்கிரமடையும் போர்!
மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கும் இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. ஆனாலும், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் கடுமையாக போராடி வருகிறது. போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் ரஷ்யாவை நேரடியாக வலியுறுத்தின. ஆனாலும், ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி செய்து வருகின்றன.  

ரஷ்யாவின் கடுமையான தொடர் தாக்குதல்களுக்கு பிறகு சமீப காலமாக உக்ரைனின் கைகள் ஓங்கியுள்ளன. அதன்படி ரஷ்யாவுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 800 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான, நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய்களின் வெடிப்புகளின் பின்னணியில் உக்ரேனிய படைகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளன. இதுகுறித்து சர்வதேச அளவில் வெளியாகும் செய்திகளில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், ரஷ்யாவை சேதப்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பாலத்தை அண்மையில் உக்ரைன் ராணுவம் தகர்த்தது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும். முடிந்தவரை ரஷிய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது. உக்ரைனுக்கு எல்லையில் பாதுகாப்பு மண்டலம் தேவை. பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: போரடித்த 2 வருட திருமண வாழ்க்கை... விவாகரத்து கோரிய ஜெனிபர் லோபஸ் - பென் அஃப்லெக்!

இந்நிலையில், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது நேற்று (ஆகஸ்ட் 20) உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தது 11 ட்ரோன்கள் இருந்ததாகத் தெரிவித்த ரஷ்ய அதிகாரிகள், இது மாஸ்கோ சந்தித்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்று என்றும் கூறினர். இந்த தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ரஷ்யா, உக்ரைனை சமாளிக்க ஆபத்து நிறைந்த திட்டங்களை தீட்டி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow