பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட மஹா விஷ்னு.. எதிர்ப்பாளர்கள் குவிந்ததால் நடவடிக்கை

Sep 7, 2024 - 15:29
Sep 7, 2024 - 15:45
 0
பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட மஹா விஷ்னு.. எதிர்ப்பாளர்கள் குவிந்ததால் நடவடிக்கை
விமான நிலைய பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட மஹா விஷ்ணு

அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குறிய பேசியதை அடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு சென்ற மஹா விஷ்ணுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அதிக நபர்கள் குவிந்ததால், பின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை: அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

மேலும், இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரேமாதிரி படைத்திருக்க வேண்டும். கோடீஸ்வரன், ஏழை, நல்லவன், கிரிமினல், ஹீரோ, வில்லன் ஏன் இத்தனை மாற்றங்கள் இருக்க வேண்டும். போன ஜென்மத்தில் செய்யும் பாவ, புண்ணியம் தான் இப்போதைய நமது வாழ்க்கை என மாணவர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்றும், அவரை இப்படி பேச அனுமதித்தது யார் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில் மஹா விஷ்ணு தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. தற்போது நான் ஆஸ்திரேலியாவில் உள்ளேன். நாளை சென்னைக்கே வருகிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இதனிடையே, சமூக வலைதளத்தில் மகாவிஷ்ணு பேச்சுக்கு எதிர்மறையான கருத்துகள் பதிவோர் அதிகமாக உள்ளதால், பத்திரமாக விசாரணைக்கு அழைத்து செல்ல காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே 100 மேற்பட்ட காவல்துறையினர் விமான நிலையத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 100 காவல்துறையினர் வர வரவழைக்கபட்டனர். மொத்தம் 200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் மற்றும் சைதாப்பேட்டை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். எதிர்ப்பாளர்கள் அதிகளவில் விமான நிலையத்தில் குவிந்ததை அடுத்து, விமான நிலையத்திலிருந்து மகாவிஷ்ணு, மாற்று வழியில் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, மஹாவிஷ்ணுவை காவல்துறையினர் கைது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow