பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழக பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, காவல் துறை ஊழியர் மற்றும் அவரது நெறுங்கிய உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்தால் 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை, 12 வயதுக்குட்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்
மேலும், வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், கூட்டு பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு மரண தண்டனையும் , மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழக்க சட்டத்திருந்த மசோதா கொண்டுவரப்பட்டது
நிறைவேற்றப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா, ஜனவரி 25-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
What's Your Reaction?