டிட்டோஜாக் அடையாள போராட்டம்.. ஆசிரியர்கள் ஆப்சென்ட்.. பள்ளிகள் மூடல்

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோஜாக்) இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Sep 10, 2024 - 10:29
Sep 10, 2024 - 15:42
 0

இடைநிலை தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஊதியம் வழங்க வேண்டும், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோஜாக்) இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் இன்று இயங்கவில்லை.

இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் இம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் இம் மாவட்டத்தில் உள்ள 1287 தொடக்கப் பள்ளிகளில் இன்று பெரும்பாலான பள்ளிகள் செயல்படவில்லை என கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow