#BREAKING : Dengue Fever : கடலூரில் 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

Dengue Fever in Cuddalore : கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Sep 27, 2024 - 09:16
Sep 27, 2024 - 14:57
 0

Dengue Fever in Cuddalore : தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக வந்த 64 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் 7 பேரும், சிதம்பரத்தில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 64 பேர் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow