வழிப்பறி வழக்கில் கைதான அரசு அதிகாரிகள்.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

சென்னையில் முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழங்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Feb 3, 2025 - 14:19
 0
வழிப்பறி வழக்கில் கைதான அரசு அதிகாரிகள்.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
வழிப்பறி வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதி மன்றம்

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமானவரித்துறை அதிகாரி பிரதீப், SSI சன்னி லாய்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் SSI சன்னி லாய்டை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த வழக்கில் வணிகவரித் துறை அதிகாரிகளான சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களுடன் இணைந்து 40 லட்சம் ரூபாய்  வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆயிரம் விளக்கு போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து அதிகாரிகள் மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகளான சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து வணிகவரித்துறை அதிகாரிகளான சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் ஆயிரம் விளக்கு போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் கஸ்டடிக்கு பின்னர் சன்னி லாய்டு  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 14-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஜாமின் கோரி  நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு  முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 

இந்நிலையில், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் அனைவரும் 47 நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

புகார்தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரரிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட பணம் இன்னும் ஒப்படடைக்கப்படவில்லை என கூறினார். இதனையடுத்து, நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கிய நீதிபதி வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow