Manimegalai : நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணுனவதான்.. ஷகிலாவிற்கு பதிலடி கொடுத்த மணிமேகலை
Manimegalai Shakila Controversy : நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணுனவதான் ஆனால் அதை நீங்க சொல்லலாமா? என்று ஷகிலாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் குக்கு வித் கோமாளி தொகுப்பாளினி மணிமேகலை.
Manimegalai Shakila Controversy : மம்மி மம்மி என்ற சிலர் வித்தியாசமா கூவிக்கிட்டு இருக்காங்க. இது பற்றி எல்லாம் அவங்க பேசலாமா? வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா? என்று ஷகிலாவை அட்டாக் செய்துள்ளார் விஜே மணிமேகலை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் மணிமேகலைக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தனர்.அது போல பல youtube சேனலிலும் பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். முதல் இரண்டு மூன்று நாட்களாக அமைதியாக இருந்த விஜய் டிவி பிரபலங்கள் பிறகு பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு வந்தனர். அந்த வரிசையில் நடிகை ஷகிலாவும் பிரியங்காவிற்கு ஆதரவாக பேட்டி கொடுத்திருந்தார்.
ஷகிலா தனது பேட்டியில், மணிமேகலைக்கு பிரியங்கா மீது பொறாமை. நம்மை விட அதிகமாக சம்பாதிக்கிறார். நம்மை விட நிறைய ப்ரோக்ராம் செய்கிறார் என்று நினைக்கிறார்.மணிமேகலையால் பிரியங்காவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரியங்கா அயர்லாந்து போகிறார் என்றால் அவருடைய வருமானத்தில் போகிறார். பிரியங்கா மட்டும் அயர்லாந்துக்கு போவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்கும் ரசிகர்கள் மணிமேகலை புதியதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறாரே அந்த வீடு கட்ட எப்படி பணம் வந்தது என்று கேட்கலாமே.
பிரியங்காவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று சிலர் அவருடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறார்கள். மணிமேகலை மட்டும் அப்போ சரியா? மணிமேகலை அவருடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு ஓடிவந்து தானே கல்யாணம் பண்ணி இருக்கிறார். ஓடி வந்து கல்யாணம் பண்ணி இருக்கிறது சமூகத்துக்கு நல்ல உதாரணமா? இவங்களை உதாரணமாக காட்ட முடியுமா? நம்மை வீட்டு பெண்களை இதுபோல நீங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று யாராவது உதாரணமாக காட்ட முடியுமா?
பிரியங்கா தப்பு என்று சொன்னால் மணிமேகலையும் தப்புதான் என்று ஷகிலா பேசியிருக்கும் நிலையில் இது சமூக வலைத்தளங்களில் அதிகமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஷகிலா பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் மணிமேகலை. அவர் பேசியுள்ள வீடியோவில், நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணுனவ தான். அதை எங்க நிஜ அம்மா கூட ஏத்துக்கிட்டாங்க. ஆனா மம்மி மம்மி என்ற சிலர் வித்தியாசமா கூவிக்கிட்டு இருக்காங்க. இது பற்றி எல்லாம் அவங்க பேசலாமா? வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா? என்று ஷகிலாவை அட்டாக் பண்ணி அந்த வீடியோவில் மணிமேகலை பேசியிருக்கிறார்.
மணிமேகலை வெளியிட்ட வீடியோவின் ஆரம்பத்திலேயே சொம்பை காட்டி எனக்கு இந்த சொம்பை பார்த்தாலே கடுப்பா இருக்கிறது. வாட்ஸ் அப்பில் வந்து நம்மிடம் மோட்டிவேஷன் கொடுக்கிற மாதிரி பேசுறாங்க ஆனா வீடியோ வெளியிட்டு நாம தான் தப்பு என்று பேசுறாங்க. பல வருஷமா கூட இருந்தவங்கன்னு நம்ம நம்புனா அவங்க தான் நம்மள முதுகுல குத்துனாங்க.நானே பக்கத்துல இருந்து பார்த்தேன் இதுதான் நடந்தது இவங்க மேல தான் தப்பு என்று எப்படித்தான் இப்படி டபுள் கேம் ஆட முடியுதுன்னு தெரியல இதுக்கெல்லாம் காரணம் பணம் தானே? பணத்துக்காக இப்படி மாறிடுதாங்க. அப்போ இவ்வளவு நாள் பேசுனதெல்லாம் நடிப்பா கோபால்? என்று அந்த வீடியோவில் குரோஷியையும் குத்தலாக பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?