காருக்குள் கிடந்த 5 பேரின் சடலம்.. அதிர்ந்த புதுக்கோட்டை..மரணத்திற்கு காரணம் கூறும் கடிதம்

Pudukkottai Family Suicide Case : புதுக்கோட்டை மாவட்டம், நமுணசமுத்திரம் அருகே காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் இறந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Sep 25, 2024 - 14:33
Sep 25, 2024 - 15:43
 0
காருக்குள் கிடந்த 5 பேரின் சடலம்.. அதிர்ந்த புதுக்கோட்டை..மரணத்திற்கு காரணம் கூறும் கடிதம்
family issue 5 commits suicide near pudukkottai

Pudukkottai Family Suicide Case : புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளங்குடிபட்டியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு 5 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் வேகனார் கார் ஒன்று நின்றுள்ளது. இன்று காலை வரை அந்த கார் நின்று கொண்டிருந்த நிலையில் அந்த கார் நின்று கொண்டதற்கு எதிரே உள்ள நகர சிவ மடம் கட்டிடத்தில் வாட்ச்மேன் ஆக உள்ளவர் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார். அவர் காரில் ஐந்து நபர்கள் இறந்த நிலையில் கிடப்பதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சேலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவருடைய மனைவி நித்யா மணிகண்டன் சேலம் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மணி எண்டர்பிரைசஸ் என்று தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் புதுக்கோட்டைக்கு எதற்காக வந்தனர் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இறந்து போனவர்கள் மணிகண்டன் அவரது மனைவி நித்யா அவருடைய தாயார் சரோஜா மணிகண்டனின் மகன் தீரன் மகள் நிகரிகா என்பது தெரிய வந்துள்ளது.

கைரேகை பதிவு செய்த பின்னர் ஐந்து பேரின் உடல்கள் மூன்று ஆம்புலன்ஸ் மூலமாக பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக குடும்பத்தினருடன் விஷம் அருந்தி கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது மேலும் அதற்குண்டான கடிதத்தையும் காரில் இருந்து காவல் துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.சேலத்தைச் சேர்ந்த அவர்கள் எதற்காக புதுக்கோட்டைக்கு வந்தனர் என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 ஒருவருக்குத் தன் உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொள்ள உரிமையில்லை. இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல! தற்கொலை எண்ணம் வந்தாலோ அல்லது மன அழுத்தம் இருந்தாலோ, அதில் இருந்து மீள்வதற்கு தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 1091

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow