வீட்டில் தங்கம் மலை போல குவிய வேண்டுமா? இந்த பரிகாரம் செய்ய மறக்காதீர்கள்!

Good Day For Purchase Gold in Tamil : ஒரு சவரன் தங்கம் அரை லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டாலும் நகைக்கடைகளில் தங்க ஆபரணங்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நகைக்கடை விளம்பரங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கம் ஒரு சவரன் 1 லட்சத்தை தாண்டி விடும். தங்கம் நம் வீட்டில் தங்குவதற்கு என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

Sep 23, 2024 - 15:25
Sep 23, 2024 - 15:40
 0
வீட்டில் தங்கம் மலை போல குவிய வேண்டுமா? இந்த பரிகாரம் செய்ய மறக்காதீர்கள்!
Good Day For Purchase Gold in Tamil

Good Day For Purchase Gold in Tamil : தங்கம் அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறை சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும். 12 ராசிக்காரர்களும் எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லது என்று பார்க்கலாம். 

ஒரு கிராம் தங்கம் தற்போது 7000 ரூபாயை எட்டியுள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தங்கத்தை வாங்குபவர்கள் தினசரியும் நகைக்கடைக்கு சென்று வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கம் எல்லோராலும் வாங்க முடிவதில்லை. அதற்கும் ஒரு யோகம் வேண்டும்.சிலர் வாங்கும் தங்க நகைகள் அடகு கடையில் போய் அமர்ந்து கொள்ளும். நாம் வாங்கும் தங்க நகைகள் நம்முடைய வீட்டில் தங்குவதற்கு சில பரிகாரங்களை செய்ய வேண்டும். 

ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். நம்முடைய வீட்டில் அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து  பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில்  வைத்து வழிபட்டு வந்தால் நம்முடைய வீட்டில் தங்கம் எப்போதும் தங்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.நகை வாங்கும் போது பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்கள் பார்த்து வாங்க வேண்டும். சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினால் தங்கம் மேன்மேலும் வாங்கும் யோகம் வரும்.

அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும்.

12 ராசிகளில் பிறந்தவர்கள் நகை வாங்குவதற்கு நல்ல நாள் நல்ல நேரம் உள்ளது. மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும், கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் நகை வாங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும், விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் மீனம் ராசிக்காரர்கள்  திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.

தங்க நகையை வாங்கிய உடன் அதில் உள்ள தோஷம் நீங்குவதற்கு நாம் கல் உப்பில் வைத்து எடுக்க வேண்டும். சிவப்பு நிற துணியில் தங்கத்தை வைத்து அணிந்தால் தங்கம் நிறைய சேரும். தங்கம் என்பது மிகப்பெரிய முதலீடு எனவே இன்றைக்கு நாம் தங்கத்தில் செய்யும் முதலீடு மிகக்பெரிய லாபத்தை கொடுக்கும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தங்கம் விலை ஏறும் முன்பாக தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. 

தங்க நகையை சிலர் தொழில் வியாபாரம் கல்வி, மருத்துவ செலவிற்காக அடகு வைப்பார்கள். சில இடங்களில் தங்கத்தை கொண்டு போய் அடமானம் வைத்தால், நாம் வைத்த நேரமோ என்னமோ தெரியாது. எவ்வளவு பணம் வந்தாலும் அந்த குறிப்பிட்ட தங்க நகை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வருவோம். அடமான வைத்த நகைக்கு நிறைய வட்டியை வேற கட்டியிருப்போம். புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படி புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது தங்கத்தை அடமானம் வைத்த ரசீதையும் உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள். அந்த நகையை எளிதில் மீட்கலாம்.பூஜை அறையில் விளக்கேற்றி தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க தங்க நகை அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் நிறைவேறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow