YouTuber Case : பாலியல் வழக்கில் சிக்கிய யூடியூபர் ஹர்ஷா சாய்.. இளம்பெண்ணை ஏமாற்றியதாக புகார்
YouTuber Harsha Sai Case : ஃபேஸ்புக் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதன் மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் யூ டியூப்பில் வீடியோ போட்டு செலிபிரிட்டியாக மாறிய ஹர்ஷா சாய் தற்போது பாலியல் பலாத்கார வழக்கு புகாரில் சிக்கியுள்ளார்.
YouTuber Harsha Sai Case : 23 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே யூ டியூப் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக அவரின் வீடியோகளுக்கு வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர்.
அதன் பின்னர் 4 லட்ச ரூபாய் காரை முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதை தனது சேனலில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் பெரும் புகழ் பெற்ற அவருக்கு மீடியா வெளிச்சமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட அவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் சென்றது.
இதன் பின்னர் YOUTUBE மூலம் தான் சம்பாதிக்கும் காசினை மக்களுக்கு செலவிட நினைத்த அவர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் ஹிட் கொடுக்க அதன்பின்னர் பலருக்கு உதவ தொடங்கினார்.ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல் என்னும் அளவுக்கு பெட்ரோல் போட்டு கொடுப்பது என வீடியோ பதிவிட்டு பிரபலமானார்.
அதேபோல் 1 லட்சம் ஏழைகளுக்கு 5 நட்சத்தர ஹோட்டலில் உணவளித்து பெரும் புகழ்பெற்றார். இவரை நிகழ்கால கர்ணன் என்றே சிலர் கொண்டாடுகின்றனர். இது தவிர தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏழைகளுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் உணவு வசதி செய்து தருவதாக உறுதியளித்து ஆச்சரியப்படவைத்தார்.
இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஹர்ஷா சாய் 3 யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இந்த 3 சேனல்களிலும் சுமார் 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். இந்த நிலையில் ஹர்ஷா சாயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.20 முதல் 22 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் ஒரு மாதத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் சம்பாதிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே யூடியூபர் ஹர்ஷா சாய் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து நடிகையை மிரட்டி பணம் கேட்டு மிரட்டியதாகவும் நரசிங்கி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . நடிகை, 25, மும்பையைச் சேர்ந்தவர், கடந்த காலத்தில் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் தோன்றினார் மற்றும் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான ஒரு திரைப்படத்தில் ஹர்ஷா சாயுடன் ஒரு பெண் கதாநாயகியாக நடித்தார்.
அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நார்சிங்கி பொலிஸார் தெரிவித்தனர். ஹர்ஷா சாய் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் கூற்றுப்படி, நடிகையும் ஹர்ஷா சாயும் முதலில் பொதுவான நண்பர்கள் ஏற்பாடு செய்த ஒரு தனிப்பட்ட விருந்தில் சந்தித்து ஒருவருக்கொருவர் சந்தித்து பழகி காதலித்துள்ளனர்.
நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஹர்சா சாய் க உறுதியளித்தார். அப்படி சொன்ன ஹர்சா சாய் ஒரு கட்டத்தில் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு நடிகையின் நிர்வாண புகைப்படங்களை செல்போனில் வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார். இதனையடுத்து காவல் நிலையத்தில் ஹர்சா சாய் மீது புகார் அளித்துள்ளார் நடிகை. இது ஹர்சா சாயின் ஃபாலோயர்ஸ்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?