K U M U D A M   N E W S

சென்னை

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!

அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஜப்பானிய கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை: கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் இந்தியா!

இந்திய கடலோர காவல்படைக்கும் (ICG) ஜப்பான் கடலோர காவல்படைக்கும் (JCG) இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘JCGS Itsukushima’ என்ற கப்பல் நேற்று (ஜூலை 7) சென்னை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது ‘உலக கடல் பயணம் பயிற்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தி கொடுமையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது!

சென்னை ஓட்டேரியில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

முடிவுற்ற திட்டப் பணிகள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.