K U M U D A M   N E W S
Advertisement

சென்னை

சென்னையில் பரபரப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா உட்படப் பலரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா மற்றும் எஸ்.வி. சேகர் ஆகியோரின் வீடுகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி உணவகத்தில் 2-வது நாளாக ED சோதனை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“உலகின் மிகப்பெரிய செல்வம் கல்வி” – நடிகர் சிவகார்த்திகேயன்

எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

பெரம்பூரில் ரயில் கேரேஜில் தீ விபத்து - ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ஊழியர்களின் துரிதமாக செயலால் பெரும் அசாம்விதம் தவிர்க்கப்பட்டது