புரட்டாசி மாத ராசி பலன் 2024: நான்கு ராசிக்காரர்களை புரட்டிப்போடப்போகும் புரட்டாசி மாதம்!

புண்ணியங்கள் நிறைந்த புரட்டாசி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Sep 9, 2024 - 06:49
Sep 9, 2024 - 22:23
 0
புரட்டாசி மாத ராசி பலன் 2024:  நான்கு ராசிக்காரர்களை புரட்டிப்போடப்போகும் புரட்டாசி மாதம்!


சென்னை: புரட்டாசி மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். மேஷம் முதல் கடகம் வரை 4 ராசிக்காரர்களுக்கும் புரட்டாசி மாதம் எப்படி உள்ளது என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

புரட்டாசியில் கிரகங்களின் பயணம்: 

புரட்டாசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கன்னி ராசியில் சூரியன் கேது, புதன் உடன் பயணம் செய்யப்போகிறார். துலாம் ராசியில் சுக்கிரன், கும்ப ராசியில் சனி, மீன ராசியில் ராகு, ரிஷப ராசியில் குரு, மிதுன ராசியில் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. புரட்டாசி 23ஆம் தேதி குருபகவான் வக்ர நிலையில் பயணத்தை தொடங்குவார். புரட்டாசி 24ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். 26ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவார்.


மேஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே உங்களுக்கு இது யோகமான மாதம். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலை அற்புதமாக இருக்கும் பணவரவு வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பொறுமையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ளுங்கள். சுப காரியம் நல்லவிதமாக நடைபெறும். இல்லத்தரசிகளுக்கு ரொம்ப நல்ல மாதம். குடும்பத்தோடு ஆலய தரிசனம் செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.  நோய்கள் நீங்கும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். மாளவியா யோகம் கைகூடி வரப்போகிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். 

ரிஷபம் 

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.  பிதுர்ராஜ்ஜித சொத்துக்கள் மூலம் லாபம் வரும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். புதிய தொழில் தொடங்கலாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சாதகமான இடத்தில் இருப்பதால் தொழில் லாபம் வரும். விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. சிலருக்கு பதவி உயரும் சம்பள உயர்வும் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும்.  மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். அரசு வேலை செய்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கவுரவம் புகழ் தேடி வரும்.  இந்த மாதம் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் மாதம்.  பிரதோஷம் நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். 

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி சிறப்பான யோகங்களை கொடுக்கப் போகிறது. காரணம் உங்க ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து அமர்ந்திருக்கிறார். உங்களுடைய தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சுக்கிரனால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் கூடும். வங்கி சேமிப்பும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வும் வருமான உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் கைகூடி வரப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானமும் கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 

கடகம்

சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் சந்தோஷங்கள் நிறைந்த மாதம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அப்பாவினால் நன்மைகள் நடைபெறும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வது மாளவியா யோகத்தை தரப்போகிறது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நிதித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பணவருமானம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். அஷ்டமத்து சனி ஆட்சி பெற்று பயணம் செய்வதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow