K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இறுதி அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குரூப் 2ஏ முதன்மை தேர்வு முறையில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 6-ல் சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

 2025 ஆம் ஆண்டிற்கான  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் விவகாரம்... புகார்தாரர் மனு தள்ளுபடி..!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என   புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.. அமைச்சர் கோவி. செழியன்..!

உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பதை சீர்குலைக்க தமிழக ஆளுநர் முயற்சி செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ மீதான வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திமுக எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு... ஜாபர் சாதிக்கின் ஜாமின் மனு தள்ளுபடி..!

அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து.. இருவர் உயிரிழப்பு.. தேடுதல் பணி தீவிரம்

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு.. வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவு

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

கொடநாடு வழக்கு.. தேவையற்ற கருத்துகளை நீக்க தயார்.. மனுவில் தெரிவிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை விவகாரம்.. தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாக இல்லை.. கிருஷ்ணசாமி காட்டம்

மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

பாலீஸ் போட்டு தருவதாக முதியவரிடம் தங்கநகையை திருடியவர் கைது..!

பாலீஸ் போட்டு தருவதாக கூறி, ஏமாற்றி தங்க நகையை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுகளை கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கேரளாவின் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது.

உன்னால தான் என் வாழ்க்கை போச்சு.. பட்டப்பகலில் வங்கி ஊழியரை தாக்கிய நபர்

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிப்புரியும் ஊழியரை தனிநபர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... திருவேங்கடம் எண்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற  தமிழக அரசு  தயார்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற  தமிழக அரசு  தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

17 வயது சிறுமி கர்ப்பம்.. உறவினர்கள் போக்சோவில் கைது..!

17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: தாய், தந்தை, கணவர், மாமனார், மாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. 

காருடன் கடலில் விழுந்த ஓட்டுனர்.. 24 மணி நேரம் கழித்து உடல் மீட்பு

சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் தவறி விழுந்த கார் ஓட்டுனரின் உடல் 24 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.

டாட்டூக்கள் மூலம் எச்.ஐ.வி பரவ வாய்ப்பு.. புற்றுநோயியல் நிபுணர் பகிர்ந்த பகீர் தகவல்

டாட்டூக்கள் போடுவதற்கு பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற ஊசியின் மூலம் எச்.ஐ.வி நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் ரத்னா தேவி தெரிவித்துள்ளார்.

ஹவாலா பணம் பறிப்பு.. பலே பிளான் போட்ட காவல்துறை அதிகாரி

ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மூன்று தங்க பதக்கம் வென்ற காசிமா.. ஒரு கோடி பரிசுத் தொகை அறிவிப்பு

உலக கேரம் போட்டியில் மூன்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை காசிமாவிற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

பணத்திற்காக காவலர் செய்த காரியம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மலர்கொடியின் மகன் கைது.. போலீசார் தொடர் விசாரணை..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலர்கொடியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.  

சாதனை படைத்த குகேஷ்.. உருவாகும் செஸ் புதிய அகாடமி.. முதலமைச்சர் அறிவிப்பு

அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென  சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று குகேஷ் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.