குங்குமப்பொட்டின் மங்கலம்..பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டுக்கு இவ்வளவு மகத்துமா?

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்புதான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

Aug 10, 2024 - 10:47
 0
குங்குமப்பொட்டின் மங்கலம்..பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டுக்கு இவ்வளவு மகத்துமா?
kungumam

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் கூட. இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் சிறப்பானது. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், உச்சி வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.எந்த விரலால் பொட்டு வைத்தால் என்ன சிறப்பு என்று பார்க்கலாம். 

பெண்கள் நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் குங்குமம் இடுவதால், மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிறக் குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றியிலும் திருமணமான பெண்கள் வகிட்டிலும் இடுவதால் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய்க் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது எனலாம்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால், குங்குமம் இட்டுக் கொண்ட எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும்.

பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்புதான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், உச்சி வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.குங்குமம் இரு புருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அலங்காரத்திற்காக இட்டுக்கொள்ளும் மற்றவைகளைக் குங்குமத்திற்கு கீழே இட்டுக்கொள்ளக் கூடாது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டப்படுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ளுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow